அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தேசிய மாநாடு திருச்சூரில் இம்மாதம் 13 முதல் 16 வரை நடைபெற உள்ளது. மாநாட்டின் சூடு கேரளா முழுவதும் மட்டுமின்றி அரபிக் கடல் கடந்து உலகக் கோப்பை நடைபெறும் கத்தார் வரை பரவி உள்ளது. கத்தாரில் உள்ள லுசைல் அரங்கத்தின் முன் வைக்கப்பட்டிருந்த மாபெரும் உலகக் கோப்பையுடன் கிசான் சபா அகில இந்திய மாநாட்டின் பதாகையை இரண்டு கேரள இளைஞர்கள் உயர்த்தினர். இந்த புகைப்படம் புதிய ஊடகங்களில் வெளியாகி வைரலானது.