கோஹிமா, ஜன.7- நாகாலாந்தின் ஆளும் தேசிய வாத ஜனநாயக முற்போக்கு கட்சி - பாஜக கூட்டணி அரசானது, மாநில மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று நாகா தேசிய சோசலிஸ்ட் கவுன் சிலின் இசக்-முய்வா பிரிவு (NSCN (I-M) குற்றம் சாட்டியுள்ளது. பாஜக ஆட்சி நடக்கும் அரு ணாச்சல பிரதேசத்தில் நிகழும் ‘விரும்பத்தகாத சம்பவங்கள்’ குறித்தும் அந்தக் கட்சி கவலை தெரிவித்துள்ளது. “அருணாச்சலப்பிரதேச பாஜக முதல்வர் பேமா கண்டு மற்றும் துணை முதல்வர் சவுனா மெய்ன் ஆகியோர் “பொறுப்பற்ற முறை யில் செயல்பட்டு, டிசிஎல் (நாகா லாந்து மற்றும் மியான்மரை ஒட்டி யுள்ள அருணாச்சலப் பிர தேசத்தின் திராப், சாங்லாங் மற்றும் லாங்டிங் மாவட்டங்கள்) மாவட்டங்களில் உள்ள நாகா மக்களின் விருப்பங்களை நிறை வேற்றத் தவறிவிட்டனர்” என்றும் குற்றம் சாட்டியுள்ளது. “பேமா கண்டு மற்றும் சவுனா மெய்ன் ஆகியோருக்கு வழங்கி வரும் ஆதரவை டிசிஎல் மாவட் டங்களின் சட்டமன்ற உறுப்பி னர்கள் வாபஸ் பெற வேண்டும் என்று 2021-ஆம் ஆண்டு செப் டம்பரில் இசக்-முய்வா பிரிவு கேட்டுக்கொண்டது. அதன் தொடர்ச்சியாக மேற்கண்ட குற்றச்சாட்டை இசக்-முய்வா பிரிவு வைத்துள்ளது. இதனிடையே, “2019-ஆம் ஆண்டு குடியுரிமை (திருத்தம்) சட்டத்தின் கீழ் அருணாசலப்பிர தேசத்தில் உள்ள எந்த அகதி களும் பழங்குடியினரின் உரிமை களை கோர முடியாது” என்று ஒன்றிய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பூர்வகுடி மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.