புதுதில்லி, டிச.29- தன்னை ‘பப்பு’ என்று பாஜகவினர் அழைப்பது பற்றி ஒருபோதும் தான் கவலைப்பட வில்லை என்று காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சொல்லப்போனால், தங்க ளின் மனத்திலுள்ள பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மறைப்பதற்காகவே பப்பு என்று கூறி, என்னை மட்டப் படுத்தப் பார்க்கிறார்கள் என் றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். ‘தி பாம்பே ஜர்னி’ (‘The Bombay Journey’)க்கு ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார். அப்போது, தன்னை பப்பு என்று விமர்சிப்பவர்கள் பற்றிய கேள் விக்குப் பதிலளித்திருக்கும் ராகுல் காந்தி, “அதைப் பற்றி யெல்லாம் எனக்குக் கவலை யில்லை. என்னை எப்படி வேண்டுமானால் அழையுங் கள். என்னை அடித்தாலும் கூட, நான் உங்களை வெறுக்க மாட்டேன். என்னை அப்படி அழைப்பவர்கள் உள்ளார்ந்த அச்சத்தாலேயே அப்படி அழைக்கிறார்கள். எனக்கு இதேபோல இன்னும் நிறைய பெயர்களை சூட்டலாம். அதனை நான் வரவேற்கிறேன். ஆனால், நான் அப்போதும் சலனமற்று இருப்பேன். ஏனென்றால், எனது பாட்டி இந்திரா காந்தி ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப் படுவதற்கு முன்பு, அவரும் ‘குங்கி குடியா’ (Gungi Gudiya - வாய்பேசாத பொம்மை) என்றுதான் அழைக்கப்பட்டார். 24 மணி நேரமும் என்னை தாக் கும் அதே நபர்கள் எனது பாட்டி யை ‘குங்கி குடியா’ என்று அழைத்தார்கள். திடீரென்று ‘குங்கிகுடியா’ இரும்பு பெண் மணி ஆனார். உண்மையில் அவர் எப்போதும் இரும்பு பெண்மணியாகவே இருந்தார். எனவே என்னை என்னவேண்டு மானாலும் அழைக்கலாம். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. இவ்வாறு அவர் கூறியுள் ளார்.