states

img

தயாரிப்பாளர்களுக்கு ஐஏஎஸ் அதிகாரி வேண்டுகோள் நாட்டில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதும் சினிமாவாக வேண்டும்!

போபால், மார்ச் 21- ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ போல, முஸ்லிம்கள் படு கொலை செய்யப்படுவது குறித்தும், படம் எடுக்க வேண்டும் என்று சினிமா தயாரிப்பாளர்களுக்கு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி நியாஸ்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் குறிப் பிட்டிருப்பதாவது: “பிராமணர்களின் வலியை ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ காட்டுகிறது. மீண்டும் அவர்கள் காஷ்மீரில் அனைத்து மரியாதையுடன் பாதுகாப்பாக வாழ அனுமதிக்கப் பட வேண்டும். அதைப் போல பல மாநிலங்களில் ஏரா ளமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதையும் காட்ட திரைப்படத் தயாரிப்பாளர் ஒரு படத்தை உருவாக்க வேண்டும். ஏனெனில் இந்தியாவில் முஸ்லிம்கள் பூச்சிகள் அல்ல. அவர்களும் மனிதர்கள். நாட்டின் குடிமக்கள் ஆவர். முஸ்லிம்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் படு கொலை செய்யப்படுவதைக் காட்ட ஒரு புத்தகம் எழுத நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதை அடிப்படை யாகக் கொண்டு ‘காஷ்மீர் பைல்ஸ்’ போன்று, அத னைத் திரைப்படமாக எடுக்க சில தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும். அதனால் சிறுபான்மையினரின் வலி மற்றும் துன்பங்களை இந்தியர்கள் முன் கொண்டு வர முடியும். இவ்வாறு நியாஸ்கான் ஐஏஎஸ் குறிப் பிட்டுள்ளார்.