states

img

வாரணாசியில் காலிச் சேர்களை பார்த்துப் பேசிய மோடி!

வாரணாசி, பிப். 28 - உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக் கூட்டத்தில், ஆயிரக்கணக்கான சேர்கள் காலி யாக கிடந்தது பாஜக தலைவர்களை அதிர்ச்சி க்கு உள்ளாக்கி இருக்கிறது. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 250 இடங்கள் வரை பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று பல்வேறு ஊடகங்கள், தேர்தலுக்கு முன் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன.  ஆனால், கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி துவங்கி இதுவரை 5 கட்டத் தேர்தல்கள் நடந்து  முடிந்துள்ள நிலையில், வாக்குப் பதிவுக்கு பிந்தைய கணிப்புக்கள், நிலைமை பாஜக-வுக்கு சாதகமாக இல்லை. சமாஜ்வாதி கூட்டணி க்கான ஆதரவு, முன்பு கணித்ததைக் காட்டிலும் அதிகமாக உள்ளது என்று கூற ஆரம்பித்துள் ளன. அதற்கேற்ப, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில் மக்கள் பெருந்திரளாக கூடுவதும், பாஜக  பிரச்சாரக் கூட்டங்களில் சேர்கள் காலியாக கிடப்பதும் தொடர் நிகழ்வுகளாகி இருக் கின்றன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி  கலந்து கொண்ட வாரணாசி பொதுக்கூட்டத் திலும் ஆயிரக்கணக்கான சேர்கள் காலியாக கிடந்தது, பாஜக தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சம்பூர்ணானந்த் சமஸ்கிருதப் பல் கலைக்கழகத்தில் ‘பூத் விஜய் சம்மேளன்’ என்ற நிகழ்ச்சி பாஜக சார்பில் ஏற்பாடு ஆகி யிருந்தது. வாரணாசி, பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதி என்பதால், இங்குள்ள 3361 வாக்குச் சாவடி  நிர்வாகிகளுக்கு ‘பூத் விஜய் (வெற்றி மந்திரத்தை) பிரதமர் மோடி வழங்கு வார் என்று கூறப்பட்டிருந்தது. வாக்குச் சாவடி முகவர்கள் மட்டும் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்வதாக இருந்தனர். ஆனால், பிரதமர் மோடி உரை யாற்றும்போது மைதானத்தின் பல பகுதி கள் காலியாக கிடந்துள்ளன. ஆங்காங்கே ஆயி ரக்கணக்கான சேர்கள் மட்டுமே இருந்துள்ளன. உட்காருவதற்கு ஆட்கள் இல்லை. பிரதமர் மோடியும் வேறுவழியில்லாமல் காலியாக கிடந்த சேர்களைப் பார்த்து, வெற்றிக்கான மந்திரத்தை கூறிவிட்டு இடத்தைக் காலி செய்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக தலைவர்களிடம் செய்தி நிறுவனங்கள் கேட்டபோது, ஆளுக்கொரு காரணத்தைக் கூறியுள்ளனர். “மாநாடு அரை மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இதனால் நாங்கள் அங்கி ருந்து வெளியேறிவிட்டோம். பிரதமர் மோடி  உரை நிகழ்த்தியபோது இருக்கைகள் காலியாக கிடந்ததற்கு அதுவே காரணம்” என்று வாக்குச்சாவடி நிர்வாகிகள் தெரிவித்துள்ள னர். “​தனது மகளுக்கு தேர்வு இருந்ததால், அவரை இறக்கிவிட சென்றுவிட்டேன்..  அதனால் மாநாட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று என்று,  பாஜக மண்டல் தலைவரான மோனிகா பாண்டே என்பவர் கூறியுள்ளார். பாஜக ஓபிசி முன்னணி தலைவர் சோம்நாத் மவுரியாவும், பிரதமர் பங்கேற்ற  மாநாட்டில் இருக்கைகள் காலியாக கிடந்ததை ஒருவழியாக ஒப்புக் கொண்டுள்ளார். “மதி யம் முதல் மக்கள் அந்த இடத்தில் காத்திருந் தார்கள். அவர்கள் அனைவரும் பசியாகவும் சோர்வாகவும் இருந்தார்கள். மற்றபடி நாற்காலிகள் காலியாக இல்லை. அவர்கள் திரும்பி வந்து விட்டார்கள்” என்று சமாளித்துள் ளார்.

எனது மரணத்திற்காக பிரார்த்தனை நடக்கிறது!

முன்னதாக மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தனது மரணத்திற்காக பிரார்த்தனைகள் நடப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். “சில அரசியல் எதிரிகள் எனது மரணத்திற்காக பிரார்த்தனை செய்துள்ளனர். நமது அரசியலில் உள்ள சிலர் எந்தளவு தாழ்ந்து சென்றுவிட்டனர் என்பதையே இது காட்டுகிறது. ஆனால் எனது மரணத்திற்காக அவர்கள் காசியில் பிரார்த்தனை செய்தார்கள் என்ற செய்தியைக் கேட்டு நான் மகிழ்ச்சியே அடைந்தேன். நான் சாகும் வரை காசியை விட்டு வெளியே போகமாட்டேன். அல்லது இதன் மக்கள் கடைசி வரை என்னை விட்டுச் செல்ல மாட்டார்கள்” என்று உருக்கம் காட்டினார். தேர்தலுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசியையே சுற்றிச் சுற்றி வந்தார். அப்போது இதுபற்றி பேசிய சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், “அவர்கள் (மோடி) ஒரு மாதம் மட்டுமல்ல, எத்தனை மாதங்களும் அங்கே (வாரணாசியில்) தங்க லாம். மக்கள் தங்கள் கடைசி நாட்களை வாரணாசியில் கழிக்க வேண்டும் என்று பொதுவான ஒரு பழமொழி உள்ளது” என்று கிண்டலாகக் கூறினார்.  இதனைத்தான், தனது மரணத்திற்காக பிரார்த்தனை நடக்கிறது என்று கிளப்பிவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தற்போது அனுதாபம் தேடியுள்ளார்.