states

img

பழங்குடியினரை வனத்தை விட்டு வெளியேற்றுகிறார் மோடி

தருமபுரி, ஜூலை 23- பழங்குடியின பெண்ணை குடியரசு தலைவராக்கிவிட்டு பழங்குடியின மக்களை வனத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது மோடி அரசு என சிபிஎம் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தருமபுரி மாவட்ட மக்கள் கோரிக்கை மாநாடு தருமபுரி குமாரசாமி பேட்டையில்  நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செய லாளர் ஏ.குமார் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு வர வேற்றார்.  தருமபுரி மக்கள் கோரிக்கை மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில  செயற்குழு உறுப்பினர் மதுக்கூர்ராம லிங்கம் , மாநிலக்குழு உறுப்பினர்கள்  டி.ரவீந்திரன், பி.டில்லிபாபு, மூத்த தலைவர்  பி.இளம்பரிதி ஆகியோர் உரையாற்றினர்.  இதில் பங்கேற்று சிபிஎம் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில்,  தருமபுரி மாவட்டத்தில் நடந்த வாச்சாத்தி கிராமத்தில் பழங்குடி பெண்களுக்கு நடந்த வன்கொடுமைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மகத்தானபோராட்டம் நடத்தி நீதி பெற்றுத்தந்தது.

ஆஷ்துரையின் சமாதியை இடிக்க வேண்டும்

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி நாங்கள் ஆளும்கட்சியோ, எதிர்கட்சியோ கிடையாது. ஆனால் மக்கள்பாதிக்கின்ற போது முதலில் களத்திற்கு வருபவர்கள் நாங்களாகத்தான் இருக்கிறோம். இதர அரசியல் கட்சிகள் வாக்குகளுக்கு மட்டுமே  மக்களிடம் வருகின்றனர். பாதிக்கப்படு கின்ற மக்களுக்காக முன்நிற்கிற இயக்கம்தான்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.  75 -ஆவது சுதந்திர தினத்தை நாம்  கொண்டாட இருக்கிறோம். தருமபுரி மாவட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகி  சுப்பிரமணிய சிவா விடுதலை போராட்டத்  தில் ஈடுபட்டு சிறை சென்றவர். சிறை யிலிருந்து தொழுநோயாளியாகத்தான் திரும்பி வந்தார். அவ்வளவு பெரிய கொடுமையை தாங்கிய மண் இது. வ.உ. சிதம்பரனார் ஒரு தலைசிறந்த வழக்கறி ஞர். அவர்மட்டும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடாமல் இருந்திருந்தால் தமிழகத்தில் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக இருந்தி ருப்பார்கள். சுதந்திர போராட்டத்தில் ஈடு பட்டு மக்களையும் தொழிலாளியையும் திரட்டி போராடினார், அதற்காக அவர் மீது வழக்கு போட்டு அவருக்கு தண்டனை வழங்கினார்கள். அன்றைக்கு 44 ஆண்டு கள் கடும் சிறைத்தண்டனை விதித்தனர். இந்திய வரலாற்றிலேயே யாருக்கும் இவ்வ ளவு பெரிய தண்டனை வழங்கியது இல்லை. இந்த தண்டனை கொடுக்க காரணமாக இருந்த தூத்துக்குடி கலெக்டர் ஆஷ்துரையை தான் ரயிலிலேயே சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார் வாஞ்சிநாதன். 

ப்பிக்கும் வேலையில் ஈடுபடுகிறது. விடு தலை போராட்டத்தில் பங்கேற்ற கட்ட பொம்மன், வஉசி, சுப்பிரமணி சிவா குறித்து இவர்கள் பேசவில்லை. ஆனால் ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்ட், சுதந்திர போராட்டத்தையே அழித்தொழித்த ஆஷ்துரையின் சமாதியை புதுப்பிக்கும் வேலையை செய்கிறார்கள். சமாதியை  புதுப்பிக்கிற வேலையை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. அதுமட்டுமல்ல அந்த சமாதியையே இடிக்க வேண்டும்  என கேட்டுக்கொள்கிறது. இல்லையென் றால் மக்களை திரட்டி வலுவான போராட்டத்  தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபடு வோம். விடுதலை போராட்டத்தின் போதே இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மோதலை ஏற்படுத்தும் வேலையில் ஆர்எஸ்எஸ் இருந்தது. அந்த ஆர்எஸ்எஸ் சின் வாரிசுகள் தான் பாஜகவினர். இவர் களை சேர்ந்த யார் ஒருவரும் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டதில்லை, சிறை செல்லவில்லை. மாறாக பிரிட்டீசாரிடம்  மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தனர்.

நாட்டின் விடுதலைக்காக போராடிய காந்தி படமும் நாடாளுமன்றத்தில் இருக்கி றது. அவரை கொல்ல திட்டமிட்ட கோல்வால்  கர் படமும் நாடாளுமன்றத்தில் உள்ளது. பழங்குடி இனத்தை சேர்ந்த பெண்ணை நாட்டின் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பழங்குடி மக்கள் வாழும் வனத்தில் ஆயிரம் ஏக்கர்  கார்ப்பரேட் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடும் சட்டத்தையும் பாஜக அரசு நிறை வேற்றியிருக்கிறது. கார்ப்பரேட்டும் மோடி யும் வனத்தில் வாழும் பழங்குடியினரை வெளியேற்ற தயாராக உள்ளது. இடதுசாரிகளின் முயற்சியால் 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை நீர்த்துபோக செய்ய பாஜக ஈடுபடுகிறது. நூறுநாள் வேலைத் திட்டத்தால் கிராமப்புறங்களில் ஏழை மக்கள் வாழ்க்கை நடத்த முடிகிறது. இதற்கும் நிதியை குறைக்கிறது மோடி அரசு. பெண்கள் முன்னேற்றம், கல்வி,  ஏழைகள் நலன்,குழந்தைகள் நலன் ஆகி யவற்றிற்கான நிதியை குறைத்துவிட்டது. விமானநிலையம், ரயில்வே, எல்ஐசி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவிட்டார்கள்.  மோடி அரசு ஏழைகளுக்கான அரசு அல்ல. கார்ப்பரேட் நலனை பாதுகாக்கும் அரசு என குற்றம்சாட்டினார்.