states

எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி புதிய வழிகாட்டுதலை திரும்பப்பெற்றது மோடி அரசு

புதுதில்லி, மார்ச் 16- கடந்த 2005-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசு எம்பி.,க்கள்  தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பட்டி யலின, பழங்குடியின மக்கள் வாழும் பகுதிக்கு 15%, 7.5% என்ற முறையில் தனி நிதி ஒதுக்கீடு செய்வதை காட்டாயமாக்கியது. அதாவது ஐந்தாண்டுகளில் செலவழிக்கப் பரிந்துரைக்கும் ரூ.25 கோடிப் பணிகளில், குறைந்தபட்சம் ரூ.3.75 கோடியை பட்டிய லின பகுதிகளிலும், ரூ.1.87 கோடியை பழங்குடியின மக்கள் நிறைந்த பகுதிகளிலும் செலவிட வேண்டும் என்பதை கட்டாய விதியாக மாற்றியது. இந்த கட்டாய விதியால் பட்டியலின, பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகள் ஓரளவு குறிப்பிட்ட  வசதிகளைப் பெற்ற நிலையில், நடப்பு நிதியாண்டி லிருந்து (2023-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல்) எம்.பி.க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பட்டியலின, பழங்குடியின மக்களுக்கென தனி நிதி ஒதுக்கீடு செய்வது கட்டாயமில்லை என ஒன்றிய மோடி அரசு அறிவித்தது.

இந்த புதிய வழிகாட்டுதல்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் மற்றும் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் ஒன்றிய புள்ளியியல், திட்ட அமலாக்க இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங்கிற்கு கடிதம் எழுதினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,” எம்பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி வழிகாட்டுதல்களில் மாற்றங்கள் சாதி அடிப்படையிலான சமூக ஒடுக்கு முறையை நிலைநிறுத்தவும், பட்டியலின, பழங்குடி யின மக்களுக்கு எதிரான பாஜகவின் அணுகுமுறையை உறுதிப்படுத்துகிறது. எம்.பி.க்கள் பட்டியலின, பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளின் வளர்ச்சிக்காக 15%,7.5% கட்டாயமாகச் செலவிடுவதை உறுதிசெய்ய மோடி அரசு இந்தப் புதிய விதிகளை மாற்றியமைக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்த நிலையில், எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி புதிய வழிகாட்டுதலை திரும்பப் பெறுவதாக மோடி அரசு செவ்வாயன்று  நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது.