states

img

143 அத்தியாவசியப் பொருட்களின் ஜிஎஸ்டியை உயர்த்தும் மோடி அரசு!

புதுதில்லி, ஏப்.25- மக்களின் அன்றாடப் பயன்  பாட்டில் இருக்கும் 143 பொருட்க ளுக்கான ஜிஎஸ்டி வரியை, தற்  போது இருப்பதிலிருந்து 10 சதவிகி தம் அதிகரிக்க நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு முடிவு செய்துள்ளது.  இதன்படி, அப்பளம், வெல்லம், அக்ரூட் பருப்பு துவங்கி சாக்லேட், குளிர்பானங்கள், வாசனைத் திர வியங்கள், கண்ணாடி பிரேம், கதவு,  ஜன்னல் மற்றும் சவரம் செய்வ தற்கான பொருட்கள் வரை விலை உயரப் போகின்றன. நாடு முழுவதும் ஒரே மாதிரி யான வரிவிதிப்பு முறை என்ற பெய ரில், கடந்த 2017 ஜூலையில் சரக்கு மற்றும் சேவை வரியை (GST) ஒன்  றிய பாஜக அரசு அமல்படுத்தியது. மொத்தம் 1,300 பொருட்கள் ஜிஎஸ்டி வரிவிகிதத்திற்குள் கொண்டுவரப்பட்ட நிலையில்,  அத்தியாவசியப் பொருட்களுக் கும் கூட அதிக வரி விதிக்கப்பட்டு இருந்தது.

கடும் எதிர்ப்பு வந்த நிலையில், அடுத்தடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் அந்தப் பொருட்க ளுக்கான வரி குறைக்கப்பட்டது. இந்த வரிக் குறைப்பால், தங்க ளுக்கு ஆண்டுக்கு ரூ. 70 ஆயிரம் கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் மோடி அரசு அப்போது அழுது கண்ணீர் விட்டது. இந்நிலையில், ஜிஎஸ்டி அறி முகப்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடையவுள்ள நிலையில், ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றி  அமைக்க திட்டமிட்டுள்ள மோடி அரசு, முன்பு வரி குறைக்கப்பட்ட பொருட்களுக்கு எல்லாம் மீண்டும் வரியை உயர்த்த முடிவு செய்துள்ளது. இவ்வாறு வரி உயர்த்தப்பட உள்ள பொருட்களின் பட்டியலில், அப்பளம், வெல்லம், சாக்லேட், அக்ரூட் பருப்பு, கஸ்டர்ட் பவுடர், சூயிங்கம், ஆல்கஹால் சேர்க்கப் படாத குளிர்பானங்கள், தோல் ஆடைகள் மற்றும் அணிகலன்கள், ஷேவிங் ரேசர்கள், ஆப்டர் ஷேவ் திரவியங்கள், வாசனை திரவியங் கள், பல் துலக்கும் திரவங்கள், வேபில்ஸ், சாக்லேட்டுகள், கோகோ பவுடர், சாறுகள் மற்றும் காபி,  கைப்பைகள், ஷாப்பிங் பைகள், கைக்கடிகாரம், சூட்கேஸ், கண் ணாடி, கண்ணாடி பிரேம்கள், பவர் பேங்க், செராமிக்சிங்க், வாஷ்  பேசின், வீடியோ கேமிராக்கள், கதவுகள், ஜன்னல்கள், சுவிட்ச் போர்டு, 32 இன்சுக்கு கீழுள்ள கலர்  டிவி உள்ளிட்ட 143 பொருட்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநில அரசு களிடம், கருத்து கேட்டுள்ள ஜிஎஸ்டி கவுன்சில், அதனடிப்படையில், மே மாதம் நடக்கவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிகிறது. ஜிஎஸ்டி-யைப் பொறுத்தவரை தற்போது 5 சதவிகிதம், 12 சதவிகி தம், 18 சதவிகிதம், 28 சதவிகிதம் என நான்கு அடுக்குகளில் வரி விதிக் கப்படுகிறது. இதில் தற்போது வரி உயர்த்தப்பட இருக்கும் 143 பொருட்களில் 93 சதவிகித பொருட்  கள் 18 சதவிகித அடுக்கில் இருப்  பவை. இந்த 125 பொருட்களுக் கான ஜிஎஸ்டி 18 சதவிகிதத்தில் இருந்து 28 சதவிகிதமாக உயர்த்  தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படு கிறது.

அப்பளம், வெல்லம் போன்ற உணவுப் பொருட்களுக்கு முன்பு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவைகள் தற்போது 5 சதவிகித வரம்புக்குள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது. அக்ரூட் பருப்புக்கு ஜிஎஸ்டி 5 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகி தமாகவும், கஸ்டர்ட் பவுடருக்கு 5 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகி தமாகவும், மேஜை மற்றும் சமைய லறை பொருட்களுக்கு 12 சதவிகி தத்தில் இருந்து 18 சதவிகிதமாக வும் ஜிஎஸ்டி உயர்த்தப்பட உள்ளது. ஜிஎஸ்டி-யில் அதிகரிக்கப் படும் ஒவ்வொரு சதவிகித வரிக்கும் அரசுக்கு கூடுதலாக ரூ. 50 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என் பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே விலைவாசி உச்சத்தில் இருக்கிறது. மொத்த விலைப் பணவீக்கம் 14.5 சதவிகி தமாகவும், சில்லரை விலை பண வீக்கம் 7.5 சதவிகிதமாகவும் அதிக ரித்துள்ளது. இந்தச் சூழலில் 120  முதல் 125 பொருட்களின் ஜிஎஸ்டி  விகிதத்தை 28 சதவிகிதமாக உயர்த்துவதன் மூலம் மக்களை  மேலும் பாதிப்புக்குள் தள்ளவி ருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. மோடி அரசு, முன்னெப்போதும் இல்லாத வகையில், கடந்த மார்ச் மாதம் 1 லட்சத்து 42 ஆயிரம் கோடி யை ஜிஎஸ்டி-யாக வசூலித்து  சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.