states

img

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை கலைக்க தீவிர முயற்சியில் மோடி அரசு“

புதுதில்லி, மே 16-  இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், மல்யுத்த முன்னணி வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், கீதா போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் இரண்டாம் கட்டமாக   தில்லி ஜந்தர் மந்தரில் ஏப்ரல் கடைசி வாரம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த வாரம் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி மடிக்கும் வகையிலான படுக்கை விரிப்புகளை கொடுத்த விவகாரத்தில் சீருடை அணியாத, மது அருந்திய நிலையில் வந்த தில்லி போலீசார் பெண்கள் என்று கூட பாராமல் மல்யுத்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தி போராட்டத்தை கலைக்க முயன்றனர். மல்யுத்த வீரர்களின் உதவியால் போலீசார் பின்வாங்கிய நிலையில், தற்போது மல்யுத்த பிரிவுக்கு சம்மந்தம் இல்லாத பெண்களை போராட்டக்களத்துக்கு அனுப்பி, போராட்டத்தை கலைக்கும் அடுத்த கட்ட வேலைகளில் களமிறங்கியுள்ளது ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் தில்லி காவல்துறை.

வினேஷ் போகத் குற்றச்சாட்டு

இதுகுறித்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கூறியதாவது, “எங்களுக்குத் தெரியாத பெண்களை இரவில் போராட்டக்களத்துக்கு அனுப்புகிறார்கள். போராட்டம் நடத்தும் இடத்தில் நாங்கள் விரும்பாத காரியங்கள் செய்யப்படுகின்றன. குறிப்பாக அடையாளம் தெரியாத பெண்கள் மல்யுத்த வீரர்கள் போட்ட கூடாரத்திற்குள் தூங்க முயன்றனர். இது போராட்டத்திற்கு கெட்ட பெயரையும், உண்மை மற்றும் நீதிக்கான எங்கள் போராட்டத்திற்குக் களங்கத்தையும் ஏற்படுத்துகிறது” எனக் குற்றச்சாட்டினார்.