states

img

சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் மோடி அரசு!

புதுதில்லி, ஜூலை 15 - பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பதற்கு எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் பிரபலமான 40 வார்த்தைகளுக்கு தடை போட்ட ஒன்றிய பாஜக அரசு, அடுத்ததாக, நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்துவதற்கு தடை விதித்து அராஜகத்தில் இறங்கியுள்ளது. பொதுவாக, எதிர்க்கட்சியினர் ஆளும் அரசுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை முன்பு அமர்ந்து தர்ணா செய்வதும், ஆர்ப்பாட்டம் நடத்துவதும் ஆண்டாண்டு காலமாக உள்ள நடைமுறையாகும். எதிர்க்கட்சிகள் தங்களின் நிலைபாட்டை வெளிப்படுத்துவதற்கான ஜனநாயக வழிமுறையாகவும் இது இருக்கிறது. அவ்வாறிருக்க, நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா நடத்துவதற்கு மோடி அரசு தடை விதித்துள்ளது எதிர்க்கட்சிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் (2022-23ஆம் நிதியாண்டு) ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11-ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், மார்ச் 14  முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாக வும் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி எதிர்க்கட்சிகள், பாஜக ஆட்சியில் அதிகரித்து வரும் வேலையின்மை, இளைஞர்களுக்கு எதிரான அக்னிபாதை திட்டம், குதிரை பேரம் மூலம் நடந்த மகாராஷ்டிர ஆட்சிக் கவிழ்ப்பு, நூபுர் சர்மா உள்ளிட்டோரின் மதவெறுப்புப் பேச்சு, உ.பி., ம.பி., குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் இஸ்லா மியர்களின் வீடுகள் இடிப்பு, சமீபத்தில் அரங்கேறிய தேசியச் சின்னம் அவமதிப்பு, சமையல் எரிவாயு  சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கம், ஜிஎஸ்டி வரி அதிகரிப்பு உள்ளிட்ட விவகாரங்களைக் கிளப்பப் போவதாக எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வந்தன.  இதனை அறிந்த நரேந்திர மோடி அரசு, எதிர்க்கட்சிகளின் தாக்குதலை எப்படி சமாளிப்பது என்று ஆலோசனை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புதிய கையேடு ஒன்றை மக்களவைச் செயலகம் அவசர அவசரமாக வெளியிட்டது. அதாவது பிரதமர் நரேந்திர மோடி  அரசை, எந்தெந்த வார்த்தைகளில் எல்லாம் எதிர்க் கட்சிகள் விமர்சிப்பார்களோ அந்த வார்த்தை களுக்கு எல்லாம் தடை செய்ய முடிவு செய்தது. அந்த வகையில், ஆங்கிலத்திலும், இந்தி யிலும் மோடி அரசை விமர்சிக்கும் வார்த்தை களான துதிபாடி (Chamchagiri), வாரிசுகள் (Chelas), சர்வாதிகாரி (Tanashah), சர்வாதிகாரம் (Tanashahi), இரட்டை நிலைப்பாடு (Dohra charitra), சிறுப்பிள்ளைத் தனம் (Baal buddhi), சகுனி (Shakuni), காலிஸ்தானி (Khalistani), நாசக் காரன் (Vinash purush), ரத்தத்தை அறுவடை செய்பவர் (Khoon ki kheti ), நாடகதாரி (Nautanki), சுயதம்பட்டம் பீற்றுபவர் (Dindhora peetna) காதுகேளாத அரசு, (Behri sarkar) உதவாகரை  (Nikamma) போன்ற 40 வார்த்தைகளைத்தடைசெய்தது. இதற்கு காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம்தெரிவித்தனர். 

அழிவு சக்தி, காலிஸ்தானி, குரூரமான வர், கிரிமினல், ரவுடித்தனம் செய்பவர், சகுனி போன்ற வார்த்தைகள் சற்று கடுமையான வை. இவற்றைப் பயன்படுத்துவது நாகரிக மானதாக இருக்காது என்று கூறுவதைக்கூட பெயரளவிற்கு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், ஊழல், மோசடி, பொய், சர்வாதிகாரம், நாடகம், இரட்டை வேடம், வாய்ஜாலம், வெட்கக்கேடு, துரோகம், கண்ணீர் போன்றவை எல்லாம் அன்றாடம் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகள்.  ஆனால், இந்த வார்த்தைகளையும் கூட பயன்படுத்தக் கூடாது என்றால், வேறு எப்படித்தான் பேசு வது? என எதிர்க்கட்சிகள் கேள்விஎழுப்பினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘புதிய இந்தியாவுக்கு புதிய அகராதி’ என்று  தலைப்பிட்டு வெளியிட்ட கண்டனப் பதி வில், ‘அன்பார்லிமென்ட்டரி’ என்ற ஆங்கில வார்த்தைக்கு ஒரு விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. அதில், ‘அன்பார்லிமென்ட்டரி’ என்றால், ‘‘நாட்டை பிரதமர் வழிநடத்தும் விதத்தை விவாதங்களில் மிகச் சரியாக வர்ணிக்கக் கூடிய வார்த்தைகள். ஆனால், இப்போது அவற்றிற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார். “நாடாளுமன்ற நெறி பிறழ்ந்த வாக்கி யத்திற்கு நல்ல உதாரணம் என்றால், அது  இரட்டை நிலைப்பாடு கொண்ட சர்வாதிகாரி ஒருவர் தனது பொய்களும், தோல்வியும் வெளிச்சத்துக்கு வரும்போது சிந்தும் முதலைக் கண்ணீர்தான்” என்றும் ராகுல் காந்தி சாடினார்.

“நாடாளுமன்ற நெறி பிறழ்ந்த சொற்கள்  பட்டியலில் உள்ள சொற்கள் இல்லாமல் சட்டங்களே இயற்ற முடியாது” என்று குறிப்பிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன், “சொற்களைக் கண்டு மக்கள் விரோத அரசுகள் அஞ்சுவது ஒன்றும் புதிதல்ல. இந்தச் சொற்கள் இல்லாமல் போனால் யாரும் கவலைப்பட போவதில்லை. உங்கள் பெயர்களே போதுமானது” என்று மத்திய பாஜக அரசை காட்டமாக விமர்சித்தார். “இனி நான் தடை செய்யப்பட்ட வார்த்தை களுக்கு வேறு வார்த்தைகளை தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். பாலியல் வன்கொடு மைக்கு பதிலாக ‘கோகோய்’ என்ற வார்த்தை யைப் பயன்படுத்தலாமா?” என்று திரிணா முல் எம்.பி. மஹூவா மொய்த்ராவிளாசினார்.  (‘கோகோய்’ உச்சபட்ச நீதித்துறை பிரபலமாக இருந்து, பாஜகவிடமிருந்து எம்.பி. பதவியை சலுகையாக பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது).

மேலும், “நல்ல வேளையாக ‘சங்கி’ என்ற  வார்த்தை தடை செய்யப்படவில்லை” என்றும் கிண்டலடித்த மொய்த்ரா, வருடாந்திர பாலின பாகுபாடு அறிக்கை 2022 வெளியாகியுள்ளது. இதில் இந்தியா 135வது இடத்தில் உள்ளது. சுகாதாரக் குறி யீட்டில் இந்தியா 146வது இடத்தில் அதாவது கடைசி இடத்தில் உள்ளது. உலகளவில் பாலின பாகுபாடு 5% க்கும் அதிகமாக உள்ள  நாடுகளில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.  இந்த ‘உண்மை’ சொல்வதும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைதானா? என்றுகேட்டார். “ஜூம்லஜீவி, ஊழல், நாடகம் மற்றும் பாசாங்குத்தனம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தடை  விதித்திருக்கலாம், ஆனால் அது ‘எல்பிஜி  மற்றும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாதை’ போன்ற வார்த்தைகள் தொடர்பாக அது மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளின் பட்டியலை திரும்ப பெறுமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வுக்கு காங்கிரஸ் மக்களவைக்குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேரடியாக கடிதம் ஒன்றை எழுதினார்.

“அவமானம், துஷ்பிரயோகம், துரோகம்,  ஊழல், நாடகம், கபடம், திறமையற்றது போன்ற வார்த்தைகள் உள்ளன. இது நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள் ஆகும். இந்நிலையில், பொதுவான அகராதி யில் இருந்து இந்த வார்த்தைகளை எடுத்து விட்டால், நாங்கள் வெளிப்படுத்த விரும்பும் சாரம்சமும் தாக்கமும் குறைந்துவிடும். மேலும், அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய விதி குழுவில் இது போன்ற முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டி ருக்க வேண்டும். ஆனால் இந்த  முக்கிய விவகாரத்தில் எந்த அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்கப்படவில்லை. எனவே, நாடாளுமன்றத்திற்கு புறம்பான இந்த  பட்டியலை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தினார். 

இதையடுத்து, மக்களவை செயல கத்தின் அறிவிக்கை குறித்து, மக்களவை சபா நாயகர் ஓம்பிர்லா விளக்கம் அளித்தார். “தற்போது நீக்கப்பட்டிருக்கும்வார்த்தைகள் அனைத்தும் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களால் நாடாளு மன்றத்தில் பேசப்பட்டு, ஆனால், அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள் மட்டுமே ஆகும். அந்த தொகுப்பையே மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ளது. மாறாக எந்த வார்த்தைகளும் தடை செய்யப்படவில்லை” என்று அவர் கூறினார். மேலும், “1100 பக்கங்கள் கொண்ட பயன்படுத்தப்படக் கூடாத வார்த்தைகள் அடங்கிய முழு அகராதியையும் எதிர்க் கட்சியினர் படித்திருப்பார்களா?” என்று கேள்வி எழுப்பிய அவர், “படித்திருந்தால் இப்படி தவறான கருத்தை பரப்பியிருக்க மாட்டார்கள்; இதற்கு முன்னர் 1954, 1986, 1992, 1999, 2004, 2009, 2010 ஆகிய ஆண்டு களிலும் இதுபோன்ற அகராதி வெளியிடப் பட்டது; 2010-இல் (காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்) இருந்து ஆண்டுதோறும் இணையதளத்திலும் அது வெளியிடப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

“நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த சுதந்திரம் உள்ளது. அதே நேரத்தில், அந்த வார்த்தைகள், அவையின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் வார்த்தைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நீக்குவது கிடையாது” என்று சமாளித்தார். இதனிடையே, மோடி அரசை விமர்சிக்கும் 40 வார்த்தைகளுக்கு விதிக்கப் பட்ட தடை தொடர்பான விவாதங்களே முடி வுக்கு வராத நிலையில், நாடாளுமன்ற வளா கத்தில் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணா விரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்து வதற்கு தடை விதித்து, அடுத்த அராஜகத்தை மோடி அரசு அரங்கேற்றியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுற்ற றிக்கை ஒன்றை அனுப்பிய மாநிலங் களவைச் செயலாளர் பி.சி. மோடி, அதில், “உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தை  ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம், வேலைநிறுத்தம் அல்லது எந்த மத விழா வையும் நடத்தும் நோக்கத்திற்காக பயன் படுத்தக்கூடாது. இதற்கு ஒத்துழைக்க உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இது எதிர்க்கட்சித் தலைவர்களை மீண்டும் கொந்தளிக்கச் செய்துள்ளது. அரசுக்கு எதிரான தமது நிலைப்பாட்டை தெரி விக்க எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தி லுள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்து வது நீண்டகாலமாக இருக்கும் நடைமுறை. ஆனால், ஒன்றிய பாஜக அரசு இதற்கும் தடை யைக் கொண்டு வந்திருப்பதை ஏற்க முடி யாது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களின் கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனர். இந்தியா எனும் மாபெரும் ஜனநாயக நாட்டை, சர்வாதிகாரத்தின் பாதையில் கொண்டுசெல்லும் நடவடிக்கையாகவே இந்த தடைகள் உள்ளன என்று தலைவர்கள் பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள னர். ஒன்றிய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மாநிலங்களவை கொறடாவு மான ஜெய்ராம் ரமேஷ், டுவிட்டரில் வெளி யிட்டுள்ள கண்டனப் பதிவில், “ஜூலை 14 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் நகலைப் பகிர்ந்துகொண்டு, “விஷ்குருவின் சமீபத்திய சால்வோ - டி(எச்) அர்னா மனா ஹை!” என்று விமர்சித்துள்ளார்.