states

img

இந்திய மாணவர்களுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் வேடிக்கை பார்க்கும் மோடி அரசு

இந்திய மாணவர்களுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம்  வேடிக்கை பார்க்கும் மோடி அரசு

டொனால்டு டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில்  வெளி நாட்டு மாணவர்களை தடை செய்வதாக அறி வித்த சில நாட்களிலேயே வெளிநாட்டு மாண வர்களின் விசா மீதும் கட்டுப்பாடுகளை அதி கரித்துள்ளது அமெரிக்க அரசு.  உலக நாடுகள் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் அமெரிக்காவிற்கு உயர்கல்வி படிக்க வரும் மாணவர்களின் சமூக ஊடகக் கணக்குகளை தணிக்கை செய்வதற்கான ஏற்பாடு செய்து முடிக்கும் வரை விசா வழங்க நேரம் ஒதுக்கக் கூடாது என அமெரிக்க செயலர் மார்கோ ரூபியோ உத்தரவிட்டுள்ளதாக தகவல் கள் வெளியாகியுள்ளன.  இது குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்வி களுக்கு அமெரிக்க தூதரகங்கள் தரப்பில் இருந்து போதிய பதில்கள் வெளியாகவில்லை. மேலும் வகுப்புகளுக்கு விடுப்பு எடுப்பது, அதிகாரிகளுக்கு/பல்கலைக்கழகத்தில் தகவல் தெரிவிக்காமல் கல்வியை மாற்றுவது, படிப்பை கைவிட்டு வெளியேறுவது என முடி வெடுத்தாலோ வெளிநாட்டு மாணவர்களின் கல்வி விசா ரத்து செய்யப்படும். மேலும் எதிர்காலத்திலும் அமெரிக்காவிற்கு வருவ தற்கான பிற விசாக்கள் பெறுவதற்கான தகுதி யும் இழக்கச் செய்யப்படும் என புது தில்லி யில் உள்ள அமெரிக்க தூதரகம் மிரட்டல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் கல்விக்காக விசா விண் ணப்பிக்கும் மாணவர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், அவர்களுடைய நட்பு நாடுகளை விமர்சித்துள்ளனரா? விமர்சிக்கின்றார்களா? என்பதனை  கண்காணிப்பதற்காக மாணவர்க ளின் சமூக ஊடகக் கணக்குகளை சோதனை செய்ய வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதமே டிரம்ப் கூறி இருந்தார். தற்போதைய தகவலின் அடிப்படையில் இந்த சமூக ஊடகத் தணிக்கையை அமெரிக்கா துவங்கினால் அது அமெரிக்காவிற்கு உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் அங்கு செல்லும் நடவடிக்கையை தாமதப்படுத்தும். அதுமட்டுமன்று, இது ஒவ்வொரு சமூக ஊடகப் பயனரின் தனியுரிமையை மீறும் செய லாக இருப்பதுடன், இனப்படுகொலைகளுக்கு எதிரான குரல்களை வெளிப்படையாக ஒடுக்கும் நடவடிக்கை என கடுமையான கண்ட னங்கள் எழுந்துள்ளன.  கடந்த சில மாதங்களாக வெளிநாட்டு மாண வர்களை நாடு கடத்துவது, விசாவை ரத்து செய்வது என வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிராக டிரம்ப் அரசு மிக மோசமான முறை யில், கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.  2023 ஆம் ஆண்டு மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் இந்திய மாணவர்கள் கல்விக்கான விசா  பெற்றனர். இது உலகின் பிற நாட்டு மாணவர் கள் பெற்ற கல்வி விசா எண்ணிக்கையை விட அதிகம்.  தற்போது வெளிநாட்டு மாணவர்களின் மீது அமெரிக்க அரசு காட்டும் கெடுபிடிகள் காரணமாக மிக அதிகமாக பாதிக்கப்படுபவர்க ளாக இந்திய மாணவர்கள் உள்ளனர். ஹார் வர்டு பல்கலைக்கழகத்தில் மட்டும் சுமார் 800 இந்திய மாணவர்கள் பயில்கிறார்கள். அது மட்டுமின்றி அமெரிக்கா முழுவதும் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாண வர்கள் பயின்று வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிற்கு உயர் கல்வி கற்ப தற்காகச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.   இந்நிலையில் டிரம்பின் இந்நடவடிக்கை இந்திய மாணவர்களின் உயர் கல்வியை கடு மையாகப் பாதிக்கும் வகையில் அமைந்துள் ளது. இஸ்ரேலின் இனப்படுகொலையையும் அதற்கு அமெரிக்காவின் ஆதரவு கொடுப்பதை யும் கண்டித்து  கொலம்பியா பல்கலைக்கழ கத்தில் போராட்டத்தில் பங்கேற்றதற்காக ரஞ்சினி ஸ்ரீனிவாசன் என்ற இந்திய மாணவி பழி வாங்கப்பட்டார். இதனால் அவர் தன்னைத் தானே கனடாவிற்கு நாடு கடத்திக் கொண்டார்.  மே மாத துவக்கத்தில் இந்தியாவில் உள்ள  சில நிறுவனங்கள், அமெரிக்காவில் சட்டத்தி ற்குப் புறம்பான குடியேற்றத்தை அதிகரிக்க உத வுவதாக குற்றம் சாட்டி விசா கட்டுப்பாட்டை அமெரிக்கா விதித்தது.  இந்த எந்த ஒரு மோசமான நடவடிக்கை களுக்கு எதிராகவும் இந்திய மாணவர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையிலும் மோடி அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுக்க வில்லை. இந்தியாவை இழிவுபடுத்தும் விதமாக முன்னெடுக்கும் அமெரிக்காவின் நடவடிக்கை களுக்கு வாய் திறந்து  கண்டனங்களைக் கூட தெரிவிக்க முடியாமல் உள்ளது.