புதுதில்லி, ஆக. 11 - இந்தியாவில் காவல்துறை, நீதித் துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புக் களால் 1860-ஆம் ஆண்டு முதல் கடைப் பிடிக்கப்பட்டு வரும் அனைத்து தண்ட னைச் சட்டங்களையும் மாற்றிவிட்டு, புதிய தண்டனைச் சட்டத்தை கொண்டு வருவதற்கான மசோதாவை நரேந்திர மோடி அரசு கையில் எடுத்துள்ளது. இதனை அறிமுகப்படுத்தி மக்கள வையில் பேசியிருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பிரிட்டிஷ் கால அடிமைத்தனத்தின் அடையாளங்களை, குறியீடுகளை ஒழித்துக் கட்டும் நட வடிக்கையின் ஒருபகுதியாக இந்த புதிய மசோதாக்களை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம்” என்றும் அறி வித்துள்ளார். இந்தியாவில் தற்போது, குற்ற வழக்குகளைப் பொறுத்தவரை, கைது நடவடிக்கை மேற்கொள்வது; விசார ணைக்கு உட்படுத்தி, வழக்குகளை நடத்துவது, குற்றங்களை கண்காணிப் பது, சாட்சிகளை விசாரிப்பது ஆகிய பணிகள், இந்தியத் தண்டனைச் சட்டம் (Indian Penal Code - IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code - CrPC) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் (Indian Evidence Act) ஆகியவை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய, நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பு, 1860 முதல் நடை முறையில் இருந்து வருகிறது. இந்த 160 ஆண்டுகளில் ஏராளமான திருத்தங் கள் கொண்டுவரப்பட்டாலும் அடிப்படை களில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்பட்டதில்லை.
இந்நிலையில்தான், இந்த சட்டங்களின் பெயர்கள் துவங்கி, நாட்டின் குற்றவியல் நடைமுறைகள், தண்டனைகள், சாட்சிய முறைகள் என அனைத்தையும் மாற்றிவிட்டு, அதற்குப் பதிலாக புதிய சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. இந்திய குற்றவியல் சட்டத்தில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய- பாரதிய நியாய சன்ஹிதா -2023, பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா -2023, பாரதீய சாக்ஷ்யா சன்ஹிதா ஆகிய மூன்று மசோதாக்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெள்ளிக்கிழமையன்று மக்க ளவையில் அறிமுகம் செய்துள்ளார். அப்போது பேசிய அமித்ஷா, “நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும்போது, அடிமைத் தனத்தின் பழைய அடையாளங்கள் அனைத்தும் அகற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு உறுதியளித்து இருந்தார். அந்த வாக்கு றுதியை நிறைவேற்றுவதன் ஒருபகு தியாகவே, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்யா சன்ஹிதா ஆகிய மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன” என்றும் தெரிவித்தார். மேலும், இந்த மசோதாக்கள் நிறை வேற்றப்பட்டால், “இந்தியாவில் இனி மேல், இந்திய தண்டனைச் சட்டத்திற்கு (IPC-க்கு) பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் (CrPC-க்கு) பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, இந்திய சாட்சியச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய சாக்ஷ்யா சன்ஹிதா ஆகி யவையே அமலில் இருக்கும்” என்றும் அமித்ஷா கூறினார். “இந்த மூன்று சட்டத் திட்டங்களும் நமது (ஒன்றிய பாஜக அரசின்) ஐந்து சபதங்களில் ஒன்றை நிறைவேற்றப் போகிறது” என்றும் அவர் கூறிக்கொண்டார். ஐபிசி குற்றப்பிரிவு என்ற சொற்றொடர் இருக்காது.