புதுதில்லி, செப். 5 - ஜி20- மாநாட்டு அழைப்பிதழில், ‘இந்தியா’ என்ற பெயரை ‘பாரத்’ என மாற்றி, மோடி அரசு அச்சிட்டுள் ளது. இது நாடு முழுவதும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, ராஷ்ட்ரிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 2024 மக்களவைத் தேர்தலுக்கான தங்களின் கூட்டணிக்கு ‘இந்தியா’ (The Indian National Developmental Inclusive Alliance - I.N.D.I.A.) என பெங்களூருவில் பெயர் சூட்டின. அப்போது முதலே, ‘இந்தியா’ என்பதை உச்சரிக்க மறுக்கும் பாஜக தலைவர்கள், ‘பாரத்’ பெயரையே பயன்படுத்தி வருகின்றனர். அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, தனது டுவிட்டர் சுயவிவரக் குறி ப்பில், ‘இந்தியா’ என்று இருந்ததை ‘பாரத்’ என மாற்றினார். பாரதத்தின் எதிரிகள் ‘இந்தியா’ என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள் என்றும் சாடினார்.
பிரதமர் மோடி ஒருபடி மேலே சென்று, “இந்தியன் முஜாஹிதீன் அமை ப்பும் ‘இந்தியா’ என்ற பெயரை பயன்படுத்தியது. கிழக்கு இந்திய கம் பெனியும் ‘இந்தியா’ என்ற பெயரை பயன்படுத்தியது” என்று பேசி, ‘இந்தி யா’ என்ற பெயரையே ஒரு பயங்கர வாதச் சொல் என்பது கேலி பேசினார். அதைத் தொடர்ந்து, நாட்டின் சட்டங்களில் இருக்கும் ‘இந்தியா’ என்ற பெயர்களை நீக்கி “இந்தியாவில் இனி மேல், இந்திய தண்டனைச் சட்டத்திற்கு (IPC-க்கு) பதிலாக ‘பாரதிய நியாய சன்ஹிதா’, குற்றவியல் நடை முறைச் சட்டத்திற்குப் (CrPC-க்கு) பதிலாக ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா’, இந்திய சாட்சியச் சட்டத்தி ற்குப் பதிலாக ‘பாரதிய சாக்ஷ்யா சன்ஹிதா’ ஆகியவையே அமலில் இருக்கும்” என்று கடந்த ஆகஸ்ட் 11 அன்று நாடாளுமன்றத்தில் அறி வித்தார். இதுதொடர்பான மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது. அப்போது, பாஜக எம்.பி. ஹர்நாத் சிங் உள்ளிட்டோர், நாட்டின் பெயரையே ‘பாரத்’ என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இறுதியாக, கடந்த செப்டம்பர் 1 அன்று, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தே நேரடியாக களத்தில் இறங்கி னார். இனிமேல் இந்தியாவை ‘பாரத தேசம்’ என்றே அழைக்க வேண்டும் என்றார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் உத்தரவை ஏற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர், உடனடியாக ‘இந்தியா’ என்பதற்குப் பதில ‘பாரத்’ பெயரை பயன்படுத்த ஆரம்பித்தனர். ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி வெளியிட்ட ஆர்.என். ரவி, இந்தியா என்ற சொல்லை தவிர்த்து பாரதம் என குறிப்பிட்டதுடன், “வலிமையான, திறமையான பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய ஆசிரியர்களுக்கு நன்றி” என கூறியிருந்தார். இந்நிலையில்தான், ‘ஜி-20’ மாநாட்டிற்கான அழைப்பிதழில், ‘இந்தி யா’ என்ற பெயரை நீக்கிவிட்டு, ‘பாரத்’ என மோடி அரசு அச்சிட்டுள்ளது. ஜூன் 9, 10 தேதிகளில் தலைநகர் தில்லியில் ‘ஜி-20’ உச்சி மாநாடு நடை பெறுகிறது. இதில், பங்கேற்க அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, கனடா, சவூதி அரேபியா, ஐரோப்பிய ஒன்றியம் என மொத்தம் 19 நாடுகளின் தலைவர்கள் இந்தியா வரவுள்ளனர். அவர்களுக்கு குடியரசுத் தலை வர் மாளிகையில் பிரம்மாண்ட விருந்த ளிக்கப்பட உள்ளது. இதையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் அழைப்பிதழ் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அழைப்பிதழில்தான், இந்திய குடியரசுத் தலைவர் திரௌ பதி முர்மு-வை திடீரென ‘பாரத குடியரசுத் தலைவர்’ (President of Bharat) என குறிப்பிட்டுள்ளது. செப்டம்பர் 18-ஆம் தேதி கூட்டி யுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’, ‘பொது சிவில் சட்டம்’ ஆகிய வற்றோடு, ‘இந்தியா’ என்ற பெயரை யும் ‘பாரத்’ என மாற்றுவதற்கு மசோதா கொண்டுவரப்படலாம் என்று உறுதிப் படுத்தப்படாத தகவல்கள் வெளி யாகின. ஆனால், அதற்கு முன்ன தாகவே, ‘பாரத குடியரசுத் தலைவர்’ என அழைப்பிதழ் அச்சிட்டிருப்பது நாடு முழுவதும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.