பாஜக-வை கடுமை யாக எதிர்த்து வந்த நிலையில், அமலாக்கத் துறையால் கைது செய் யப்பட்ட மகாராஷ்டிர சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் நவாப் மாலிக், உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நவாப் மாலிக் கிற்கு வெள்ளிக்கிழமை காலை வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக, அவருக்கு சிறுநீரகவியல் பிரிவில் சிகிச்சை அளிக் கப்பட்டு வருவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. நவாப் மாலிக் கைதுக் கெதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சி யினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.