புதுதில்லி, டிச.22- கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டு 2021-ஆம் ஆண்டில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து பகிரத் சவுத்ரி எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய சமூக நீதித்துறை மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மக்களவையில் பதில் அளிக்கையில், “கழிவுநீர் அகற்றும் பணியில் இந்த ஆண்டில் மட்டும் 21 பேர் உயிரிழ ந்துள்ளனர். கர்நாடகா, தமிழகத்தில் தலா 5 பேர் உயிரிழந்தனர். தில்லியில் 4 பேர், குஜராத்தில் 3 பேர், ஹரி யானா, தெலுங்கானாவில் தலா 2 பேர், பஞ்சாப்பில் ஒருவர் உயிரிழந்துள்ள னர். கடந்த ஆண்டு 19 பேர் உயிரிழந்த னர். 2019-ஆம் ஆண்டில் 117 பேரும், 2018-ஆம் ஆண்டில் 70 பேரும், 2017-ஆம் ஆண்டில் 93 பேரும் உயிரிழந்தனர். கழிவுநீர் சுத்திகரிக்கும் பணியில் இருந்த 1,416 பணியாளர்களுக்கு சிறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு, சுத்தி கரிக்கும் இயந்திரங்கள் வழங்கப் பட்டுள்ளன. ஒன்பது மாநிலங்களைச் சேர்ந்த 142 பணியாளர்களுக்கு ரூ.5 லட்சம் மானியத்தில் கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது. 2018-19ஆம் ஆண்டில் 24,609 பணியாளர்களுக்கு இயந்திரம் மூலம் சுத்திகரிப்புப் பணி களை மேற்கொள்ளவும் பயிற்சி அளி க்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.