states

img

ஐ.நா.வின் காலநிலை மாற்ற மாநாட்டில் இந்தியாவின் நிலை என்ன?

புதுதில்லி, டிச.20- ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உறுப்பு நாடு களின் காலநிலை மாற்றத்திற்கான மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டதா? அதன் விவரங்கள்  என்ன என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன்  கேட்டிருந்த கேள்விக்கு அமைச்சர் பதில ளித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் திங்  களன்று, பி.ஆர். நடராஜன், காப் 27 மாநாடு தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். அதில்  சமீபத்தில் எகிப்தில் நடத்தப்பட்ட ஐக்கிய நாடு களின் காலநிலை மாற்றத்திற்கான மாநாட்டில் (COP 27) இந்தியா கலந்து கொண்டதா? ஆம் எனில், விவாதிக்கப்பட்ட விஷயங்களின் விப ரங்கள், விவாதிக்கப்பட்ட பல்வேறு பொருட்  களில் இந்தியாவின் நிலைப்பாடு, அதோடு அத னால் இந்த மாநாட்டில் ஏற்பட்ட விளைவுகள்  என்னென்ன?

மேலும் வெப்பநிலையானது 2 டிகிரி செல்சியஸ்க்கு மேல் அதிகமாகி விடாமல் இருப்பதை உறுதிப்படுத்த, 2015 பாரிஸ் ஒப் பந்தம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதா? பசுமை  இல்ல வாயுக்களை குறைத்தல் மற்றும் வளரும் நாடுகளுக்கு நிதி ஆதரவை விரிவாக்குதல் ஆகி யவற்றின் மீது, எடுக்கப்பட்ட முடிவுகளின் விவ ரங்கள் என்னென்ன? மேலும், கிளாஸ்கோவில் இறுதியாக நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் எடுத்த நிலைப்பாட்டையே இங்கும் இந்தியா மேற்கொண்டதா? அதன் விவரங்கள் என்னென்ன என்றும் கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌவே, கூறியதாவது: ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற கட்ட மைப்பிற்கான 27ஆவது பிரதிநிதிகள் மாநாட்  டில் (COP 27) இந்தியாவிலிருந்து அமைச்சர்கள் மட்டத்திலான ஒரு குழு கலந்து கொண்டது. காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்  தின் கீழ் குறிக்கோள்களை அடையும் எண்  ணத்தில், காலநிலை மாற்றத்தினை தணித்தல்,  ஏற்றுக் கொள்தல், இழப்பு மற்றும் சேதம், கால நிலை நிதி போன்ற விஷயங்களில் உலகளவில் கூட்டு செயல்பாடுகளில் முன்னேறி செல்வதற்  காக மாநாட்டின் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுபட்டனர். 

தொழில்நுட்ப பரிமாற்றம்,  காலநிலை நிதி

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற் கான கட்டமைப்பின் கொள்கைகள் மற்றும்  பாரிஸ் ஒப்பந்தம் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டியதின் அவசியத்தை இந்தியா வலி யுறுத்தியுள்ளது. இதில் இவற்றிற்கிடையே சம பங்கு, பொதுவான கொள்கைகள் ஆனால்  வேறுபட்ட  பொறுப்புகள் மற்றும் அவரவர்  களுக்கான திறன்களும் உள்ளடங்கும். தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் காலநிலை நிதி ஆகிய விஷயங்களிலும், அதோடு கால நிலை செயல்பாடுகளிலும் வளர்ந்த நாடுகள் தலைமை ஏற்றுச் செல்ல வேண்டும். இந்த முயற்சியானது, மற்ற பல கூட்டாளி வளரும் நாடுகள் மற்றும் குழுக்களோடு கூட்டாக எடுக்  கப்பட்டது. கூட்டாளிகள் மாநாடு 27 (COP 27) “செயல்  பாட்டு கூட்டாளிகள் மாநாடு என பெயரி டப்பட்டது. இந்த மாநாட்டின் மிகப்பெரிய வெளிப்பாடுகள், மற்றவைகளுக்குள், இழப்பு மற்றும் சேதாரம் பற்றி ஒரு முடிவினை ஏற்  படுத்துதல், காலநிலை மாற்றத்தினை தவிர்க்க  செயல்திட்டங்களை வகுத்தல், சரியான மாற் றங்களை கொண்டுவருதல், விவசாயத்தில் காலநிலை செயல்பாட்டினை கொண்டு வரு தல் ஆகியவற்றின் மீதான முடிவுகளை உள்ள டக்கியதாகும். சம பங்கின் மீது கவனம் செலுத்து தல், தேசிய சூழல்கள் மற்றும் அக்கறையை விவசாயத்தில் ஏற்பதற்கான முக்கியத்துவம், உலகளாவிய உச்சம் தொடலின் மீது ஏதேனும் குறிப்பிட்ட விளைவுகளைத் தொடரும் போது,  அதில் சம பங்கின் தேவை.

வாயுவெளியேற்ற குறைப்பு குறிக்கோள்

மொத்த பூஜ்ஜிய மற்றும் வாயு வெளியேற்ற குறைப்பு குறிக்கோள்கள், உலக கரியமில நிதியறிக்கையில் நியாயமான பங்கிற்கு ஆத ரவு அளித்தல், குறைந்த இழப்பு மற்றும் சேதா ரத்திற்கான முன்னேற்பாடுகளுக்கு நிதிய ளித்தல், ஆகியவை இந்தியாவின் முயற்சி களில் அடங்கும். 80 சதவீதத்துக்கும் மேலான உலக மக்கள் தொகையை பிரதிநிதித்து வப்படுத்தும், G77+ சீனா ஆகிய நாடுகள் சரி யான மற்றும், சமபங்கு விளைவுகளை ஏற்படுத்த இணைந்தன. காலநிலை நிதியை பொறுத்தவரை வளர்ந்த நாடுகள் தங்களது கடமைகளில் தோல்வியடைந்தது குறித்த, வருந்துகின்ற மற்றும் அக்கறைப்படுகின்ற, இதுவரை நிகழ்ந்திராத வெளிப்படையான வெளிப்பாட்டு முடிவுகளில் இந்தியா பங்கெ டுத்துள்ளது.  வளரும் நாடுகளுக்கு நிதி ஆதரவினை விரி வாக்குதல் மற்றும் பசுமை இல்ல வாயுக்களை  குறைத்தல் ஆகியவற்றோடு, சம்பந்தப்பட்ட முடிவுகளில் இந்தியாவின் நிலைப்பாடு பிரதி பலிக்கப்பட்டது.  உள்நாட்டு தணிப்பு நடவடிக்கைகளை  முடுக்கிவிடுதல் மற்றும் செயல்படுத்துதல் மூலம் வாயுக்கள் வெளியேற்றத்தை  கூட்டாக குறைக்க முயற்சிகளை அதிகப்படுத்துதலின் அவசரத் தேவையை, “தணிப்பு குறிக்கோளை  மேம்படுத்தும் வேலைத் திட்ட விஷயங்களில்” எடுத்த முடிவுகளில் வலியுறுத்தியது.  விரிவான பொருளாதார வகையில், முழு மையாக வாயுக்கள் வெளியேற்ற குறைப்பு இலக்குகள் மற்றும் வளரும் நாடுகளுக்கான ஆதரவு ஆகிய விஷயங்களுக்கு,  முன்னோடி களாக செயல்படுவதில், வளர்ந்த நாடுகளுக்  குள்ள கடமைகள் உட்பட, பாரிஸ் ஒப்பந்தத் தின் ஷரத்துகளை நினைவுபடுத்துவதாக இந்த சூழ்நிலையில் முடிவுகள் இருந்தன. இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார்.