states

பொருளாதார வீழ்ச்சி : சிபிஎம் எச்சரிக்கை

புதுதில்லி, டிச.28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் டிசம்பர் 27-28 தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை

பொருளாதார நிலை

இந்தியப் பொருளாதாரத்தில் மந்த நிலைமை ஆழமாகிக் கொண்டிருப்பது குறித்து அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்து கிறது. ‘பொருளாதாரத்தை மீட்டெடுத்து விட்டோம்’ என்று அரசாங்கத்தின் சார்பில்  படாடோபமாகப் பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டபோதிலும், இந்தியாவின் உற்பத்தி வல்லமையைப் பெருக்கக்கூடிய விதத் தில் முதலீடுகள் அதிகரிக்கவில்லை. தொழில்துறை உற்பத்தி (industrial  output), கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக அக்டோபரில் 4 விழுக்காடு கூர்மையாக சுருங்கி யிருக்கிறது. ஒவ்வோராண்டும் தொழில் வளர்ச்சி தொடர்பாக வெளியிடப்படும் தரவுகள், உற்பத்தித் துறையில் (manu facturing output) குறிப்பிடத்தக்க அள விற்கு 5.4 விழுக்காடு வீழ்ச்சி ஏற்பட்டி ருப்பதைக் காட்டுகிறது. தொழில்  உற்பத்தி அட்டவணை அக்டோபரில் 129.6 ஆக இருக்கிறது. இது, 2021 செப்டம்பருக்குப் பின்  மிகவும் குறை வானதாகும். நுகர்வுப்பொருள்களின் உற்பத்தியில் நீடித்திருக்கக்கூடிய பொருள்களின் (durables) உற்பத்தி 15.3 விழுக்காடும், உடனடிப் பயன்பாடு உள்ள பொருள்களின் (non-durables) உற்பத்தி 13.4 விழுக்காடாகவும் சுருங்கி இருக்கிறது.

அதிகரித்து வரும் வேலையின்மை

வேலையின்மை விகிதம் தொடர்ந்து  ஏறுமுகம் நோக்கிச் சென்று கொண்டி ருக்கிறது. இத்துடன் தொழிலாளர் பங்களிப்பு விகிதமும் (Labour Participation Rate), வேலைவாய்ப்பு விகிதமும் (employment rate) வீழ்ச்சி  அடைந்திருப்பது மிகவும் மோசமாகும். வேலையின்மை விகிதம் நவம்பரில் 8 விழுக்காடாக இருந்ததுடன் ஒப்பிடும் போது டிசம்பரில் 8.8 விழுக்காடாகும். ஊரக வேலையின்மை விகிதம் 7.8 விழுக்காடாக இருக்கக்கூடிய அதே சமயத்தில், நகர்ப்புற வேலையின்மை 9.6 விழுக்காடாக பாய்ச்சல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

விலைவாசி உயர்வு

உணவுப் பொருள்களின் பணவீக்கம் மக்களின் வாழ்வாதாரங்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றிக் கொண்டிருப்பது தொடர்கிறது. வேலை வாய்ப்புகளை உரு வாக்கக்கூடிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திடும் துறைகளில் பொது முத லீடுகளைப் பெரிய அளவில் ஏற்படுத்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.