லக்னோ, ஜன.1- தேர்தலைப் பார்த்துப் பயந்து போய் விட்டதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர் சித்திருந்த நிலையில், “பாஜக முதலில் சொந்தப் பணத்திலி ருந்து தேர்தல் பிரச்சாரக் கூட் டங்களை நடத்தட்டும்” என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலை வர் மாயாவதி பதிலடி கொடுத் துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: “காங்கிரஸூம் பாஜகவும் ஆட்சியில் இருந்தால், அது ஒன்றிய அரசில் ஆகட்டும் அல்லது மாநிலத்தில் ஆகட் டும், தேர்தலுக்கு சில மாதங்க ளுக்கு முன்பே அடுத்தடுத்து கூட்டங்களைப் போட ஆரம் பிப்பார்கள். அவர்கள் செல வழிப்பது அரசுப் பணத்தை.
அதாவது, ஏழைகளின் வரிப் பணத்தை எடுத்து இவர்கள் செலவழிக்கிறார்கள். ஆனால் இந்தக் கட்சிகள் ஆட்சியில் இல்லாவிட்டால், பொதுக் கூட் டங்களை நடத்த மாட்டார்கள். மவுனமாகி விடுவார்கள். இவர்கள் கூட்டும் கூட்டங்க ளுக்கு வருவோரில் பாதிப் பேர் அரசு ஊழியர்களும், தேர் தலில் டிக்கெட் கேட்போரின் ஆதரவாளர்களும்தான்.
இதை உ.பியில் மட்டுமல்ல, பஞ்சாபிலும் பார்க்கிறோம், உத்தரகண்ட்டிலும் பார்க்கி றோம். ஆனால், எங்களது கட்சி ஏழைகளுக்கானது, ஒடுக்கப் பட்ட மக்களுக்கானது. முத லாளிகளுக்கான கட்சி அல்ல. மற்ற கட்சிகளைப் பார்த்து காப்பி அடித்து பிரமாண்டக் கூட்டம் போட்டால் அந்த செல வைத் தாங்கும் சக்தி எங்களது கட்சிக்கும் கிடையாது. தொண் டர்களுக்கும் கிடையாது. தேர்தலைப் பார்த்து நான் நடுங்கிப் போய் விட்டதாக, அமித் ஷா கூறியுள்ளார். அர சுப் பணத்தில் குளிர் காய்ந்து கொண்டிருப்பவர்கள் அவர் கள். அவர்களுக்கு நடுக்கம் இல்லாமல்தான் இருக்கும். தேர்தலைப் பொறுத்தவரை எங்களுக்கென்று தனி பாணி உள்ளது. அதை நாங்கள் கடைப் பிடித்துக் கொள்வோம்.” இவ்வாறு மாயாவதி பேசி யுள்ளார்.