states

img

காங்கிரசுக்கு எதிராகவே ‘மவுனம் கலைத்த’ மாயாவதி

“உ.பி. தேர்தலில் இதுவரை மாயாவதி அமைதியாகவே உள் ளார். இது ஆச்சரியம் அளிக்கிறது” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியிருந்த நிலையில் காங்கிரசுக்கு எதிராகவே மாயாவதி தனது மவுனத்தைக் கலைத் துள்ளார். “உ.பி. தேர்தலில் காங்கிரஸ் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உ.பி.யிலிருந்து பாஜகவை அப்புறப் படுத்த வேண்டும். அதை காங்கிரசால் செய்ய முடியாது. எனவே, மக்கள் ஒரு மனதாக எங்களுக்கு வாக்களிக்கலாம்” என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.