புதுதில்லி, மே 11- முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். இளங்கலை மருத்துவப் படிப்புக்களுக் கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதியும், முதுகலை மருத்துவப் படிப்புக்களுக் கான நீட் தேர்வு மே 21-ம் தேதியும் நடை பெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்னும் நிறைவடையாத நிலையில் நடப்பாண்டுக் கான தேர்வை நடத்துவது முறையாக இருக்காது என்பதால் பல்வேறு தரப்பினர் முதுநிலை நீட் தேர்வை தள்ளிவைக்கு மாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; “முது நிலை நீட் தேர்வை தள்ளிவைத்து மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள் ளார். இதனிடையே நீட் தேர்வை ஒத்தி வைக்கக் கோரி எம்பிபிஎஸ் மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மே 13-ஆம் தேதி விசார ணைக்கு வருகிறது.