states

இடிப்பதே தீர்வெனில் மசூதி, கோயில் எதுவும் மிஞ்சாது!

வரலாற்றுப் பேராசிரியர் இர்பான் ஹபீப் பேட்டி

புதுதில்லி, மே 25 -  முகலாயர் காலத்து மசூதிகள், முன்பு கோயில்களாக இருந்தவை என்றால், இன்றைய கோயில்கள் பலவும் முன்பு புத்த மத விகார்களாக இருந்தவை... எனவே, வழிபாட்டுத் தலங்களை இடிக்கப் புகுந்தால் எதுவும் மிஞ்சாது என்றும், மேலும், இவை வேண்டாத வேலை என்றும் புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் இர்பான் ஹபீப் கூறியுள்ளார். “முகலாய மன்னர் அவுரங்கசீப் கோயில்களை இடித்தார் என்பதற்காக, இன்றைய ஆட்சியாளர்கள் மசூதி களை இடிப்பது சரியாக இருக்குமா?”  என்றும் ஹபீப் கேள்வி எழுப்பியுள்ளார். வாரணாசி ஞானவாபி மசூதி, மதுரா ஷாயி ஈத்கா மசூதிகள் முன்பு  கோயிலாக இருந்தவை என்றும், எனவே மசூதிகளை இடித்து அங்கு மீண்டும் கோயில் கட்டப்பட வேண்டும் என்றும் சங்-பரிவாரங்கள் கலவரத்தைத் தூண்டி வரும் நிலையில், இப்பிரச்சனைகள் தொடர்பாக, 90 வயதாகும் பேராசிரியர் இர்பான் ஹபீப் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது:

முகலாயப் பேரரசர் அவு ரங்கசீப்பால் சிவன் கோயில் இடிக்கப் பட்டு கியான்வாபி மசூதி கட்டப்பட்ட தாகக் கூறப்படுகிறது. இது உண்மையா என்றால், அவுரங்க சீப் தன் ஆட்சி யில் கோயில்களை இடித்தது உண்மை தான். இதுபோன்ற நடவடிக்கைகள் ஒளிவுமறைவுடன் செய்யப்படவில்லை என்பதற்கு அவரது அரசு குறிப்புகளான ‘ஆலம்கீர் நாமா’விலேயே வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.  ஆனால், வாரணாசியில் இடிக்கப்பட்டது சிவன் கோயில்தான் என்பதற்கு ஆதாரம் இல்லை. அங்கு சிவலிங்கம் கிடைத்ததாகக் கூறி, இன்று சிவன் கோயில் என்கின்றனர். ஆனால், வேறு கடவுள்களின் கோயி லாகவும் கூட அது இருக்கலாம். அதே போல கியான்வாபி மசூதியை அவுரங்கசீப்தான் கட்டினாரா? என்பதுவும் தெரியவில்லை. இப்போது, கியான்வாபி மசூதியை இடித்து விட்டு மீண்டும் கோயில் கட்ட வேண்டும் என்று கூறுகிறார்கள். அக்கா லங்களில் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் மசூதிகளில் புத்த விஹார்களின் சிற்பங்களும், கற்களும்கூட கிடைக் கின்றன. இதற்காக அந்த கோயிலும், மசூதிகளும் கூட இடிக்கப்பட வேண்டுமா? அவ்வாறு செய்வது அறிவின்மை.  வாரணாசியிலும், மதுராவில் வீர் சிங் புந்தேலா கட்டிய கேசவ் ராயின்  மிகப்பெரிய கோயிலையும் அவுரங்கசீப்  இடித்தது உண்மைதான். கி.பி.1670-இல் அவுரங்கசீப் இடித்தார் என்பதற்காக இன்றைய அரசும் அதை செய்ய வேண்டுமா, என்ன? இதுபோன்ற செயல், இந்திய தொல்பொருள் வரலாற்று சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம் 1958-க்கு எதிரானது. இதன்படி, அவற்றை பாதுகாக்க வேண்டுமே தவிர இடிக்கக் கூடாது.

வாரணாசி கோயில் எவ்வளவு பழமையானது என்பது எனக்கு தெரி யாது. கியான்வாபியின் ஒசுகானாவில் கிடைத்தது சிவலிங்கம் என இந்துக் களும், சிவலிங்கம் இல்லை என்று முஸ்லிம்களும் மறுக்கின்றனர். அடிப் படையில், கியான்வாபியின் ஒசுகானா வில் கிடைப்பது எதுவாக இருந்தாலும்  சிவலிங்கம் ஆகிவிடுமா? ஏதேனும் ஒன்றை சிவலிங்கம் என அழைக்க வேண்டும் எனில் அதற்கு வழிமுறை கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் சிவலிங்கம் என்று அழைக்க முடியாது. கியான்வாபி வழக்கில் ஏற்கெனவே தாக்கல் செய்த மனுவில் சிவலிங்கத்தை பற்றி எந்த குறிப்பும் இல்லை. இப்போது சிவலிங்கம் கிடைத்திருப்பதாக கூறுகின்றனர். அன்றைய காலத்தில், வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படும்போது இருந்த வழக்கம் காரணமாக மசூதியில் கோயிலுக்கான சின்னங்கள் மற்றும் கற்கள் கிடைக்கின்றன. இதனால் என்ன  பிரச்சனை எழுந்துவிடப் போகிறது? இதேபோல், நாட்டிலுள்ள கோயில்களில் தேடினால் பல கோயில்களில் புத்த விஹார்கள் கிடைக்கும். இவை முன்பு புத்த மதத்தின் விஹார்களாக இருந்திருக்கலாம். எனவே, ஏற்கெனவே இருந்த வழி பாட்டுத்தலங்களை இடித்துக் கட்டுவது என்றால் நாட்டின் பல முக்கிய இந்து கோயில்களையும் இடிக்க வேண்டியது வரும்.

ராஜஸ்தானின் ராணா பிரதாப் சிங்கின் சித்தோரிலுள்ள கோட்டையில் பழங்கால ஒரு மினார் உள்ளது. அதன் கீழ் பகுதியில் தேவதைகளும், மேல்பகுதியில், ‘அல்லா! அல்லா!’ என அரபி எழுத்துக்களும் இருக்கும். இதற்காக அது மசூதியாகிவிடுமா? மதுராவிலுள்ள மசூதியும், கிருஷ்ண ஜென்மபூமி கோயிலை இடித்து  கட்டப்பட்டதாக வழக்குகள் தொடுக்கப் பட்டுள்ளன. உண்மையில், மதுரா வின் கேசவ் தேவ் எனும் பெயரி லான கோயிலானது ஜஹாங்கீர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. மதுராவின் ஷாயி ஈத்கா மசூதியும்  முகலாயர் காலத்தில் கட்டப்பட்டது தான். ஆனால், கோயிலை இடித்துக் கட்டப்பட்டதற்கான வரலாற்றுக் குறிப்பு கள் இல்லை. 

முகலாயர் கால மசூதிகள் இடிக்கப்பட வேண்டும் என தற்போது தீவிரமாக பேசப்படுவதற்கு 1992-இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும், அங்கு மீண்டும் கோயில் கட்ட  உத்தரவிட்டதும் ஒரு காரணமாகி விட்டது. இந்த வழக்கில் நீதிமன்றத்தின் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களை புறந்தள்ளி, கோயில் கட்ட அனுமதிப்ப தற்காக (நம்பிக்கையின் அடிப்படை யில்) கூறப்பட்ட காரணம் எவரும் எதிர்பார்க்காதது. இவ்வாறு இர்பான் ஹபீப் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழ கத்தில் படித்தவரும், உலகின் தலை சிறந்த வரலாற்று ஆய்வாளராக மதிக்கப்படுபவருமான இர்பான் ஹபீப், மத நம்பிக்கையற்றவர் என்பது  இங்கு குறிப்பிடத்தக்கது.