அசாம் மாநிலம் பர்பேடா மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மனோ ரஞ்சன் தாலுக்தார் போட்டியிடுகிறார். இங்கு மே 7 ஆம்தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இவருக்கு ஆதரவு அளிக்குமாறு 75 சமூக ஆர்வலர்கள் மற்றும் அறிவுஜீவிகள் காங்கிரஸ் கட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.