புதுதில்லி, பிப்.17- பாஜகவின் போலி தேசியவாதம் ஆபத்தானது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார். பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், வீடியோ வெளியிட்டு பிரச்சாரம் செய்த அவர், அரசியல் லாபத்துக்காகவோ, உண்மையை மறைக்கவோ காங்கிரஸ் ஒரு போதும் நாட்டைப் பிரிக்கவில்லை என்று கூறியுள்ளார். “ஒருபுறம் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சனைகளை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்க, மறுபுறம், கடந்த ஏழரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசு, தங்கள் தவறு களை ஒப்புக்கொண்டு, சரி செய்யாமல், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை இன்னும் குற்றம் சாட்டி வருகிறது. பிரதமர் பதவிக்கு என சிறப்பான முக்கியத்துவம் உள்ளதாக உணர்கிறேன். தன்னுடைய தவறுகளை மறைப்பதற்காக வரலாற்றை குறை கூறுவதை கைவிட்டு பிரதமரின் கண்ணியத்தை காக்க வேண்டும் என்று கூறினார். நான் பத்து ஆண்டுகள் பிரதமராக இருந்தபோது,
இந்தியாவின் பெருமையை ஒருபோதும் குலைக்கவில்லை. நான் பலவீனமானவன், மௌனமானவன், ஊழல்வாதி என பொய்யாக குற்றம் சாட்டப்பட்டேன். இப்போது பாஜகவும் அதன் பி மற்றும் சி அணியும் நாட்டின் முன் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன என்பதில் எனக்கு திருப்தி உள்ளது. பாஜக தலைமையிலான அரசுக்கு பொருளாதாரக் கொள்கை பற்றிய புரிதல் இல்லை. இப்பிரச்சனை நாட்டுடன் மட்டும் நின்றுவிடவில்லை. வெளியுறவுக் கொள்கை யிலும் இந்த அரசாங்கம் தோல்வி யடைந்துள்ளது என்பதையே காட்டுகிறது. தலைவர்களை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிப்பதாலோ, ஊஞ்சலில் ஆடு வதாலோ, பிரியாணி ஊட்டுவதன் மூலமோ வெளியுறவுக் கொள்கையை கட்டமைக்க முடியாது என்பதை பிரதமர் புரிந்துகொண்டி ருப்பார் என நம்புகிறேன். இந்த அரசாங்கத் தின் போலி தேசியவாதம் வெற்றுத்தன மாகவும் ஆபத்தானதாகவும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.