states

தீக்கதிர் விரைவு செய்திகள்

வன்முறைச் சம்பவங்களால் தேர்வு எழுத அஞ்சும் மணிப்பூர் மாணவர்கள் 

பாஜகவின் வகுப்புவாத அரசிய லால் வடகிழக்கு மாநிலங்க ளில் ஒன்றான மணிப்பூர் கடந்த 10 மாதங்களாக பற்றி எரிந்து வரு கிறது. வன்முறைக்கு 200-க்கும் மேற் பட்டோர் உயிரிழந்த நிலையில், பல்லா யிரக்கணக்கான மக்கள் சொந்த மாநி லத்திலேயே அகதிகளாக வாழ்ந்து வரு கின்றனர். இந்த இக்கட்டான சூழலில் மணிப்பூரில் புதனன்று 12-ஆம் வகுப் பிற்கான ஆண்டு இறுதித் தேர்வு தொடங்  கியது.  மணிப்பூரில் எப்பொழுது, எந்த இடத்  தில் வன்முறை வெடிக்கும் என கணிக்க  முடியாத சூழல் இருப்பதால் 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 12-ஆம்  வகுப்பு தேர்வுக்கு வராமல் உயிர்  பிழைத்தால் போதும் என்ற நிலையில்  தேர்வை புறக்கணித்துள்ளனர். இதனால்  36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  கலந்துகொள்ள வேண்டிய 12-ஆம்  வகுப்பு தேர்வில் வெறும் 31 ஆயிரம்  பேர் மட்டுமே கலந்து கொண்டதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

சீக்கிய அதிகாரியை காலிஸ்தானி என அழைப்பதா? பாஜக தலைவருக்கு எதிர்ப்பு

மேற்குவங்கத்தின் வடக்கு 24  பர்கானாஸ் மாவட்டத்திற்கு உட்பட்ட சந்தேஷ்காளி கிரா மத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யின் நிர்வாகி ஷாஜகான் ஷேக், அவ ரது ஆதரவாளர்கள் நில அபகரிப்பில் ஈடு பட்டதாகவும், பெண்களை பாலியல் வன் கொடுமை செய்து துன்புறுத்தியதாகவும் குற்றச் சாட்டு எழுந்துள்ளது.   இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ்  கட்சியில் இருந்து பாஜகவிற்கு தாவிய வரும், மாநில சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி செவ்  வாயன்று சந்தேஷ்காளிக்கு சென்றார்.  சம்பவ இடத் தில் இருந்த சீக்கிய போலீஸ்  அதிகாரியான ஜஸ்பிரீத் சிங்கை “காலிஸ்தானி” என்று சுவேந்து அதிகாரி  கூறினார். உடனே ஜஸ்பிரீத் சிங், “நான்  தலைப் பாகை அணிந்திருப்பதால் நீங்கள்  என்னை காலிஸ்தானி என்று அழைக்கி றீர்கள். இதுதான் உங்களின் வீரமா? ”  என்று சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பாஜக வினரிடம் கேள்வி எழுப்பினார்.  ஜஸ்பிரீத் கேள்விக் கணைகளால் தாக்குப்பிடிக்க முடியாமல் சுவேந்து அதி காரி உட்பட பாஜகவினர் அந்த இடத்தை  விட்டு ஓட்டம் பிடித்தனர். பாஜக தலை வர் சுவேந்து அதிகாரியின் இந்த பேச் சிற்கு “இந்தியா” கூட்டணி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உலகத் தாய்மொழிநாள்:  சட்டப்பேரவையில் உறுதியேற்பு

சென்னை,பிப்.21- தாய்மொழியின் சிறப்பை போற்றும்  வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 அன்று உலகத் தாய்மொழி  தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் புதனன்று (பிப்.21) கேள்வி நேரம் முடிந்ததும்,உலகத் தாய்மொழி தினத்தையொட்டி சட்டப்பேரவைத்  தலைவர் மு. அப்பாவு தலைமையில் முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்கள் உறுதி மொழி ஏற்றனர். “எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறையை கொண்டுவரப் பாடுபடுவோம். தேமதுரத் தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களும் தமிழில் கையொப்பமிடும். குழந்தைகளுக்குத் தமிழ் மொழியில் பெயர் சூட்டப் பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம்” என்று உலகத் தாய்மொழி நாளில் உள மார உறுதி கூறுகிறேன் என்று அனை வரும் உறுதி மொழி எடுத்துக்கொண்ட னர்.

பாலிநாரிமன் மறைவு : முதல்வர் இரங்கல்

சென்னை, பிப். 21- புகழ்பெற்ற சட்டவியல் அறிஞரும்  முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனர லுமான பாலி நாரிமன் மறைவையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் இது  குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “புகழ்பெற்ற சட்டவியல்  அறிஞரும் முன்னாள் கூடுதல் சொலி சிட்டர் ஜெனரலுமான பாலி நாரிமன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். வழக்கறிஞராக எழுபதாண்டுகளுக்கும் மேலான தனது பயணத்தில் சுமார் ஐம்பதாண்டுகள் அவர் உச்சநீதிமன்றத்தில் வாதாடி யுள்ளார் என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், குறிப்பிடத்தகுந்த ஒன்றும் ஆகும். பல முக்கியத் தீர்ப்புகளுக்குக் கருவியாக விளங்கிய பாலி நாரிமன் சட்டவியலுக்கு ஆற்றிய பங்களிப்புகள் தலைமுறை தலைமுறைகளுக்கும் நினைவுகூரப்படும். அன்னாரை இழந்து  தவிக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக வழக்கறி ஞர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தோழர் பி.சீனிவாசராவ் நினைவு மண்டபம்  பராமரிக்கப்படும்: அமைச்சர்  சாமிநாதன்

சென்னை,பிப்.21- தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்வி எழுப்பிய இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி  உறுப்பினர் மாரிமுத்து, “விடுதலைப் போராட்ட வீரர் தோழர் பி.சீனிவாசராவ் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நினைவு மண்டபம் அமைத்து கொடுத்தார். ஒவ்வொரு ஆண்டும் விழா எடுக்கப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ள அந்த மணி மண்டபம் பராமரிக்கப் படுமா? என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், உடனடியாக பரா மரிப்பு பணிகள் செய்யப்படும்” என்றார். காஞ்சிபுரம் தொகுதி திமுக உறுப்பினர் எழிலரசன் எழுப்பிய துணைக் கேள்விக்கு, போதி தர்மருக்கு காஞ்சிபுரத்தில் அரங்கம் அமைப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து நிதி நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

திமுக மூத்த தலைவர்  த.வேணுகோபால் மறைவுக்கு இரங்கல்

சென்னை,பிப்.21- தமிழ்நாடு சட்டப்பேரவை புதன்கிழமை (பிப்.21) காலை 10 மணிக்கு கூடியதும், திமுக மூத்த தலை வரும் திருவண்ணாமலை மாவட்டம்,  தண்டராம்பட்டு சட்டமன்ற தொகுதி யின் முன்னாள் உறுப்பினரும், மக்களவை முன்னாள் உறுப்பினரு மான த.வேணுகோபால் மறைவு குறித்து இரங்கல் குறிப்பை பேரவைத் தலைவர் மு. அப்பாவு வாசித்தார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

ஜெர்மனியில் வேலை நிறுத்தம்: சென்னையில் விமானங்கள் ரத்து

சென்னை, பிப்.21- சென்னையிலிருந்து ஜெர்மன் நாட்டில் உள்ள ஃப்ராங்க்பர்ட் நகருக்கு, லுப்தான்சா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தினமும் இயக்கப்படுகிறது. நள்ளிரவு 12.10 மணிக்கு சென்னை  வரும் இந்த விமானம், மீண்டும் அதிகாலை 1.50 மணிக்கு ஃப்ராங் பர்ட் நகருக்கு புறப்பட்டுச் செல்லும். சென்னையிலிருந்து அமெரிக்கா, கனடா, ஜெர்மன் செல்லும் பயணிகள்,  இந்த விமானத்தைப் பயன்படுத்து வதால், இந்த விமானத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். தினமும் சுமார் 300க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விமானத்தில் பயணிப்பர். இந்த நிலையில், ஜெர்மன் நாட்டில்  உள்ள லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள், ஊதிய உயர்வு கேட்டு இரண்டாவது நாளாக செவ்வாயன்று (பிப்.21) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, லுப்தான்சா ஏர்லைன்ஸ்  விமான நிறுவனம், பல்வேறு நாடு களுக்கு இயக்கப்படும் பயணிகள் மற்றும் சரக்கு விமான சேவைகளை ரத்து செய்தது. இதனால் நள்ளிரவு 11.50 மணிக்கு ஃப்ராங்க் பர்ட் நகரிலிருந்து சென்னை  வரும் லுப்தான்சா ஏர்லைன்ஸ் பயணிகளுக்கான விமான சேவை களும், அதிகாலை 1.50 மணிக்கு சென்னையில் இருந்து ஃப்ராங்க் பர்ட் நகருக்கு புறப்பட்டு செல்லும் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.