பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோவில் மலப்புரம் பாஜக வேட்பாளர் எம்.அப்துல் சலாம் வாகனத்தில் ஏறவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டார். கேரளம் மாநிலம் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான அப்துல் சலாம் மலப்புரம் தொகுதிக்கான பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள் ளார். பாலக்காடு நகரில் செவ்வா யன்று (மார்ச் 19) மோடியின் ரோடு ஷோ நடைபெற்றது. இதில் பிரதம ருடன் மாநிலத் தலைவர் கே.சுரேந்தி ரன், பாலக்காடு, மலப்புரம், பொன்னானி தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் திறந்த வாகனத்தில் கலந்துகொள்வார்கள் என்று முன்ன தாக பாஜக தலைமை தெரிவித்தி ருந்தது. ஆனால், ரோடு ஷோ தொடங்கி யபோது சுரேந்திரனுடன் பாலக்காடு வேட்பாளர் சி.கிருஷ்ண குமாரும், பொன்னானி வேட்பாளர் நிவேதிதா சுப்ரமணியனும் மட்டுமே இருந்தனர். பாதுகாப்புப் பொறுப்பில் இருந்த எஸ்பிஜி காவலர், அப்துல் சலாமை வாகனத்தில் ஏற விடாமல் தடுத்தார். பிரதமர் அலுவலகம் வழங்கிய பட்டியலில் அப்துல்சலாமின் பெயர் இல்லை. இதனால் பாலக்காடுக்கு அதி காலையில் ரோடு ஷோவுக்காக வந்த அப்துல் சலாம் வெறும் பார்வையாள ராக மாறினார். பின்னர் மோடி திரும்பியவுடன் மாநிலத் தலைவர்களை அழைத்து தனது அதிருப்தியை அப்துல் சலாம் வெளிப்படுத்தினார். பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ள முஸ்லிம் வேட்பாளர் பட்டியலில் அப்துல் சலாம் மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மோடி வந்தார்; கூட்டம் வரவில்லை: பிரதமர் நரேந்திர மோடியை முன்னிறுத்தி ரோடு ஷோ நடத்தி யும் பாஜகவால் மக்களை திரட்ட முடி யவில்லை. ஒரு லட்சம் பேரை திரட்ட மாவட்ட தலைமை முடிவு செய்திருந் தது. பாலக்காடு தவிர திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களில் இருந்தும் ஆட்கள் அழைத்து வரப்பட்டனர். எனினும், முடிவெடுத்ததில் கால் பங்கு கூட மக்கள் வரவில்லை. அஞ்சுவிலக்கில் இருந்து தலைமை அஞ்சலக சந்திப்பு வரை ஒன்றரை கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ நடந்தது. பாலக்காட்டில் எதிர்பார்த்த அளவு மக்கள் பங்கேற்க வில்லை என மாநிலத் தலைமையும் மாவட்ட தலைவர்களிடம் அதிருப்தி யை தெரிவித்தது. ரோடு ஷோவை காண காத்திருந்த சிலர் கட்டெரிக்கும் வெயிலால் கீழே விழுந்தனர். மாநாட்டு நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை. மோடி மக்களிடம் பேசவோ வாக்கு கேட்கவோ இல்லை. 15 நிமிடங்களில் ரோடு ஷோவை முடித்துவிட்டு ஹெலிகாப்டரில் சேலம் திரும்பினார்.