பெங்களூரு, பிப்.16- அமைதியான, பலவகையிலும் முன்னேறிய மாநிலமான கர்நாட கத்திற்கு ஹிஜாப் விவகாரம் மூலம் பாஜக அவமானத்தைத் தேடித் தரு வதாகவும், இதன்மூலம் வேலை வாய்ப்பு மற்றும் வளர்ச்சி தடை படும் என்றும் கர்நாடக முன்னாள் அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா கூறியுள்ளார். காங்கிரசைச் சேர்ந்த கிருஷ்ண பைரே கவுடா, இதுதொடர்பாக அண்மையில் தனது டுவிட்டர் பக் கத்தில் கூறியிருந்ததாவது: 5 வருடங்களுக்கு முன்பு பெங்க ளூருவும், கர்நாடகமும், உலகின் தகவல் தொழில்நுட்பத்துறை ஜாம் பவானாக தலைப்புச் செய்திகளில் அடிபட்டன. பாராட்டப்பட்டன. மிக வும் சிறந்த நகரம், ‘ஸ்டார்ட் அப்’ தொழில்களின் தலைநகரம், அதி கம் பேருக்கு வேலைவாய்ப்பு களைக் கொடுத்து வேகமாக வள ரும் நகரம் என்றெல்லாம் பெங்க ளூரு பாராட்டப்பட்டது. ஆனால், இன்று வேலை வாய்ப்புகள் பறிபோய்க் கொண்டி ருக்கின்றன. இளம் இந்தியர் களுக்கு இடையே நெருப்பை மூட்டி, அதில் குளிர் காய ஆரம் பித்திருப்பவர்களை பற்றியதாக செய்தி மாறியுள்ளது. ஒருவரை ஒரு வர் வெறுத்து பாகுபாடு பாராட்டி, மோதிக் கொள்ள பயிற்சி தர ஆரம் பித்துள்ளனர். இளம் பெண்களை அவர்களது உடைகளை வைத்து துன்புறுத்தி அதை நாம் (கர்நாட கம்) தலைப்புச் செய்தியாக்கிக் கொண்டுள்ளோம். பல வகையிலும் வளர்ந்த, அமைதியான கர்நாடகத்திற்கு இன்று பாஜக, மிகமோசமான அவ மானத்தைத் தேடித் தந்து கொண்டி ருக்கிறது. இவ்வாறு கிருஷ்ண பைரே கவுடா குறிப்பிட்டுள்ளார்.