பெங்களூரு, பிப். 15 - “கர்நாடக மாநிலம் மாண்டி யாவில் ஹிஜாப் அணிந்த மாண விகளுக்கு அனுமதி மறுக்கப்பட் டது, ஒரு சமூகத்தை அவமானப் படுத்தும் செயல்” என்று மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி சாடியுள்ளார். கர்நாடக மாநிலத்தில், பிப்ர வரி 14 அன்று, ஒன்று முதல் பத் தாம் வகுப்பு வரையிலான மாண வர்களுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப் பின் பற்றி, பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறி வித்தார். அதன்படி, ஒரு வார விடு முறைக்குப் பின்னர், திங்களன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அப் போது, ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் மறுபடியும் வகுப்ப றைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டனர். குறிப்பாக, மாண்டியா மாவட்டத்தில் உள்ள ரோட்டரி பள்ளியின் வாசலில் ஆசிரியை ஒருவர் நின்று கொண்டு ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை, பள்ளிக்குள் நுழையவிடாமல் தடுத்து திருப்பி அனுப்பினார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகின. இந்நிலையில், மாண்டியா சம்பவம் தொடர்பான அந்த இரண்டு நிமிட வீடியோவை தன்னுடைய டுவிட்டர் பகிர்ந்த மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாது தீன் ஒவைசி, “இது ஒரு சமூ கத்தை அவமானப்படுத்தும் செயல். அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் இதுதான் நடக் கும். எங்கே என் கண்ணியம்?. அதிகாரம் நிரந்தரம் அல்ல; என்பதை பாஜக நினைவில் கொள்ள வேண்டும்” என்று சாடி யுள்ளார்.