மும்பை, நவ. 9 - மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், பால்கர் மாவட்ட த்தில் மட்டும் 13 ஊராட்சிகளில் 100 வார்டுகளைக் கைப்பற்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. இங்கு 167 வார்டுகளில் சிபிஎம் போட்டியிட்ட நிலையில், அவற்றில் 100 வார்டுகளில் வெற்றிபெற்றுள் ளது. மேலும் 13 இந்த ஊராட்சிகளில் 8 ஊராட்சித் தலைவர்களின் பதவி களையும் சிபிஎம் கைப்பற்றியுள்ளது. இவர்களில் 4 பேர் பெண் தலை வர்கள் ஆவர். தலசாரி தாலுகாவிற்கு உட்பட்ட கவாடாவில் தர்ஷன போதலே, கரஜ்கானில் சங்கீதா தோதாடே, உத்வாவில் நிர்மல் பார்லே, குர்சே-வில் விஜய் போயே, அப்லட்-டில் பிரவின் பமானியா ஆகியோர் ஊரா ட்சித் தலைவர்களாக தேர்ந்தெடு க்கப்பட்டுள்ளனர். இதேபோல தஹானு தாலுகா விற்கு உட்பட்ட, சோக்வே-யில் லஹானி தௌடா, மோட்கானில் ரஞ்சனா சௌத்ரி, கின்வலி-யில் ஷெலு துமடா ஆகியோர் ஊராட்சித் தலைவர்களாகி உள்ளனர். பழங்குடியினர் மற்றும் விவ சாயிகளின் ஆதரவால், இந்த வெற்றி யை சிபிஎம் பெற்றுள்ளதாக, கட்சி யின் மத்தியக் குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாயிகள் சங்க த்தின் (ஹஐமுளு) தலைவருமான அசோக் தாவ்லே தெரிவித்துள்ளார். பால்கர் மாவட்டத்திலுள்ள தஹானு சட்டமன்றத் தொகுதியில், 1978 முதல் ஒன்பது முறை சிபிஎம் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2019- ஆம் ஆண்டும், சிபிஎம் சார்பில் வினோத் நிகோல் தஹானு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.