states

img

கோயில் குழாயில் தண்ணீர் பிடித்த தலித் பெண் மீது தாக்குதல்!

போபால், டிச.18- கோயில் குழாயில் தண்ணீர் பிடிக்க விடாமல் தலித் பெண்ணைத் தடுத்தது டன், அவரையும் அவரது பெண் குழந்தையையும் தாக்கி கீழே தள்ளிவிட்ட சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தா பகுதிக்கு உட்பட்ட பூரணி கல்லா மண்டியைச் சேர்ந்தவர் தீபிகா (28). இவர் தனது குழந்தையுடன் கோயில் குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றபோது, அவரை கோலு பண்டிட் மற்றும் சந்தீப் ஆகிய இருவர் தடுத்து, சாதியைக் குறிப்பிட்டு இழிவுபடுத்தியதுடன், கீழேயும் தள்ளி விட்டுத் தாக்கியுள்ளனர். இதில் தீபிகாவின் குழந்தை காயம் அடைந்துள்ளது.  

கடந்த அக்டோபர் மாதம் முதலே இவ் வாறு கோயில் குழாயில் தண்ணீர் பிடிக்க விடாமல் தீபிகாவை இவர்கள் தடுத்து வந்துள்ளனர். இந்த தீண்டாமை கொடுமை பற்றி அக்டோபர் 24 மற்றும் நவம்பர் 25 ஆகிய தேதிகளில் இரண்டு முறை காவல்துறையிடம் தீபிகா புகார் அளித்துள்ளார். எனினும், போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், கடந்த வியாழக்கிழமையன்றும் சாதி ஆதிக்கவெறி யர்களால் தீபிகா தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் ஊடகங்கள் மூலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், குற்றவாளிகளைத் தேடி வரு வதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பட்டியல் வகுப்பி னர் - பட்டியல் பழங்குடியினர் நல காவல் ஆய்வாளர் அனுராக் லால் தெரிவித் துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடப்பது குறிப்பிடத்தக்கது.