போபால், ஜன.18- “ராமர், கிருஷ்ணரைப் போல, பிரதமர் மோடியும் கடவுளின் அவதாரம்தான்” என்று மத்தியப்பிரதேச மாநில பாஜக அமைச்சர் கமல் பட்டேல் ஏகத்திற்கு துதி பாடியுள்ளார். வேளாண்துறை அமைச்சராக இருக்கும் அவர் மத்தியப் பிரதேச தலைநகர் மாநிலம் போபா லில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப் போது, இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது: “இந்தியாவை வழி நடத்துவது, ஊழலில் இருந்து விடுவிப்பது, பொது நலனை உறுதி செய் வது போன்ற- பிரதமர் மோடி யால் நிறைவேற்றப்பட்ட பணிகள் அனைத்தும் சாதா ரண ஒரு மனிதரால் நிறை வேற்றபடக் கூடியவை அல்ல. இந்தியாவில் எந்த ஒரு நெருக்கடியான நிலை மற் றும் கொடுங்கோல் சூழல் அதிகரிக்கும் போதெல் லாம், கடவுள் மனித வடி வில் அவதாரம் எடுக்கிறார் என்று நமது மதம் மற்றும் கலாச்சாரத்தில் கூறப்பட் டுள்ளது. ராமர் மனித உரு வில் அவதாரம் எடுத்து, ராவ ணனைக் கொன்று, மற்ற தீய சக்திகளை வென்று, மக் களைப் பாதுகாத்து ‘ராம ராஜ்யத்தை’ நிறுவினார். கம்சனின் அட்டூழியங்கள் அதிகரித்தபோது, பகவான் கிருஷ்ணர் பிறந்து அவ ரது கொடுமைகளை முடி வுக்குக் கொண்டு வந்தார், சாதாரண மக்களுக்கு நிவா ரணம் அளித்தார். அதேபோல், காங்கிரஸ் ஆட்சியில் அட்டூழியங்கள் அதிகரித்த போது, ஊழல், சாதி வெறி தலைதூக்கி, நாட் டின் கலாச்சாரம் அழிக்கப் பட்டு, விரக்தியின் சூழல் எங் கும் நிலவியபோது, அதை முடிவுக்குக் கொண்டுவர நரேந்திர மோடி பிறந்தார். இவை ஒரு சாதாரண மனி தனால் செய்ய முடியாத காரி யங்கள். எனவே, பிரதமர் நரேந்திர மோடி ஒரு அவதா ரம், சாத்தியமற்ற செயல் களை செய்தார். அவர் கட வுளின் அவதாரம். இவ்வாறு, மோடியே கூச்சப்படும் அளவிற்கு கமல் பட்டேல் துதி பாடியுள்ளார்.