காற்று மாசுபாடு
இந்தியர்களின் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் குறையும்
காற்று மாசுபாட்டை அதி கரித்தால், இந்தியர்களின் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் குறையும் என ஆய்வறிக்கையில் செய்திகள் வெளி யாகியுள்ளன. இதுதொடர்பாக சிகாகோ பல்கலைக் கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,”இந்தியாவில் 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023ஆம் ஆண்டு காற்று மாசுபாடு அதிக மாக இருந்தது. இது உலக சுகாதார அமைப்பு வழங்கிய வழிகாட்டுதலைவிட 8 மடங்கு அதிகம் ஆகும். காற்று மாசு பாட்டை உலகளாவிய தரநிலைக்கு ஏற்ப நிரந்தரமாக குறைத்தால், இந்தியர்களின் சராசரி ஆயுள்காலத்தில் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும். இந்தியாவில் மிகுந்த காற்று மாசுபாடு கொண்ட மண்டலமாக வடக்கு சமவெளி உள்ளது. மோசமான காற்று மாசுபாட்டால் தில்லி மக்களின் ஆயுட் காலம் 8 ஆண்டுகள் குறைகிறது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுத லின்படி காற்று மாசுபாடு குறைந்தால், அங்குள்ள மக்களின் சராசரி ஆயுட்காலம் 5 ஆண்டுகள் அதிகரிக்கும். அதே போல காற்று மாசுபாடு குறைந்தால் ராஜஸ்தான் மக்களின் ஆயுள்காலம் 3.3 ஆண்டுகள் அதிகரிக்கும். மத்தியப் பிரதேச மக்களின் ஆயுள்காலம் 3.1 ஆண்டுகளும், மகாராஷ்டிரா மக்களின் ஆயுள்காலம் 2.8 ஆண்டுகளும் அதி கரிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.