புதுதில்லி, டிச.13- வேளாண் விளைபொருட்க ளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதப்படுத்தும் வகையில், பாஜக எம்.பி. வருண் காந்தி, நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதா தாக்கல் செய் துள்ளார். இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசும், பாஜக தலைமையும் இன் னும் உறுதியான முடிவெடுக்காத நிலையில், கட்சி நிலைப்பாட்டைத் தாண்டி வருண் காந்தி இந்த மசோ தாவைத் தாக்கல் செய்துள்ளார். “இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் செல வில் சாகுபடி செய்யப்படும் 22 பயிர்களுக்கு, சுவாமிநாதன் கமிட்டி (2006) பரிந்துரைத்தபடி, உண்மையான உற்பத்திச் செலவு, ஊதியம் பெறாத குடும்ப உழைப்பின் மதிப்பு மற்றும் விவ சாய நிலம் மற்றும் பிற விவசாய உபகரணங்களுக்கான வாடகை ஆகியவற்றின் அடிப்படையில், மொத்த உற்பத்தி செலவில் 50 சதவிகிதம் ஈவுத்தொகை அடிப்ப டையில் குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price - MSP) நிர்ணயிக்கப்படும்.
இதற்கு குறைவான விலையைப் பெறும் எந்தவொரு விவசாயி யும் பெறப்பட்ட விலைக்கும் உத்த ரவாதம் அளிக்கப்பட்ட தொகைக் கும் உள்ள வேறுபாட்டிற்குச் சம மான இழப்பீட்டைப் பெறுவதற்கு உரிமையுடையவர் ஆவார். சில காரணங்களால் விவசாயி களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கவில்லை என் றால், இந்த விஷயம் குறித்த தக வல் கிடைத்த ஒரு வாரத்திற்குள் விற்பனை விலைக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலைக்கும் இடை யிலான வித்தியாசத்தை அர சாங்கம் செலுத்த வேண்டும். இந்த உத்தேச சட்டத்தை அமல்படுத்த வேளாண்மை மற்றும் விவசாயி கள் நல அமைச்சகத்தில் தனித் துறை உருவாக்கப்படும். இந்தத் துறையானது விவசாயிகள் பிரதி நிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயக் கொள்கை வல்லுநர் களைக் கொண்ட தனி முடிவெடுக் கும் அமைப்பாக இருக்கும். ஒவ் வொரு ஐந்து கிராமங்களிலும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட கொள்முதல் நிலையம் அமைக் கப்படும். விநியோகச் சங்கிலிக் கான உள்கட்டமைப்புகள் (கிடங்கு, குளிர்பதனக் கிடங்கு போன் றவை) உருவாக்கப்படும்” என்று வருண் காந்தி தனது மசோதா வில் குறிப்பிட்டுள்ளார்.