அகமதாபாத், டிச. 30 - பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி, தனது 100-ஆவது வயதில் காலமானார். குஜராத் மாநிலம், காந்தி நகர் ரேசானி லுள்ள பிருந்தாவன் சொசைட்டி பகுதியில், தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் வசித்து வந்த ஹீராபென் மோடி, உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த புதன்கிழமையன்று அகமதாபாத்தில் உள்ள யு.என். மேத்தா இதயநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்கப் பட்டார். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் அவரது உடல் கவலைக்கிடமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக் கிழமையன்று அதிகாலை காலமானார். தாயார் ஹீராபென் மறைவைத் தொடர்ந்து, அவரது இறுதிச் சடங்கு நிகழ்வில் பங்கேற்க அகமதாபாத் விரைந்த பிரதமர் மோடி, காந்தி நகரில் உள்ள வீட்டில், தாயார் ஹீராபென் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் இறுதி நிகழ்ச்சிகளுக்காக ஹீரா பென் மோடியின் உடல் எடுத்துச் செல்லப்பட்ட போது, பிரதமர் மோடி, தானே தனது தாயாரின் உடலை சுமந்து சென்றார். ஆம்புலன்சிலும் கூடவே பயணித்தார். இடுகாட்டில் மீண்டும் தனது தாயாருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் தாயா ரின் உடலுக்குத் தீ மூட்டினார். இறுதி நிகழ்ச்சி கள் முடிவடைந்த நிலையில், தனது வழக்கமான நிகழ்ச்சிகளுக்குத் திரும்பி னார்.
தாயாரை இழந்த சோகத்திற்கு இடையே யும், மேற்கு வங்கத்தில் மாநிலத்திற்கான ‘வந்தே பாரத்’ ரயில் துவக்க விழாவில் காணொலி முறையில் கலந்து கொண்டார். முன்னதாக பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கர், குடியரசு முன்னாள் துணைத்தலை வர் வெங்கையா நாயுடு, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே, ராகுல் காந்தி எம்.பி., மற்றும் பினராயி விஜயன், மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், கவுதம் அதானி உள்ளிட்ட தொழிலபதிகள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். பிரதமர் மோடி தனது தாயாரின் மறைவு குறித்து, டுவிட்டரில் கருத்துப் பதிவிட்டார். அதில், “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கட வுளின் காலடியை சேர்ந்துள்ளது. என் தாயிடம், ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடை யாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் கொண்ட மும்மூர்த்தி களை நான் எப்போதும் உணர்ந்தேன்” என்று மோடி குறிப்பிட்டார்.