மகாராஷ்டிர மாநில சிறுபான்மையினர் நல த்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான நவாப் மாலிக்கை, அமலாக் கத்துறை கைது செய்து ள்ள நிலையில், “இது எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கான முயற்சி” என்று காங்கிரஸ் தலைவர் பாலாசாஹேப் தோராட் கண்டித்துள்ளார். “மகாராஷ்டிர அரசை கலைக்க பாஜக மேற்கொண்ட நடவடிக்கைகள் எடுபடாத தால் இந்த கைது நடைபெற்றுள்ளது” என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் ஜெயந்த் பாட்டீலும் விமர்சித்துள்ளார்.