புதுதில்லி,டிச.15- எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் புகார்களை ஆன்லைன் மூலமாக அனுப் பும் வசதியை லோக்பால் அமைப்பின் தலைமை நீதிபதி பினாகி சந்திரகோஸ் தொடங்கி வைத்தார். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு ஊழியர்களு க்கு எதிரான ஊழல் வழக்கு களை விசாரிக்க லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன. இதில் தேசிய அளவில் லோக்பாலும், மாநில அளவில் லோக் ஆயுக்தாவும் செயல்பட்டு வருகின்றன. லோக்பால் அமைப்பில் ஊழல் புகார்களை தெரிவிப்ப தற்கு நேரடி முறை, இ-மெயில், தபால் வழி போன்ற முறை கள் தற்போது பின்பற்றப் பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு களை ஆன்லைன் மூலமும் அனுப்பும் வசதி அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் lokpalo nline.gov.in. என்ற இணைய தளம் மூலம் இந்த புகார்களை எந்த இடத்தில் இருந்தும், எப் போதும் அனுப்ப முடியும். இந்த முறையில், அனை த்து கட்டங்களிலும் புகாரின் நிலை குறித்த தகவல்கள் புகார்தாரர்களுக்கு இ-மெயில் மற்றும் குறுந்தக வல்கள் மூலம் கிடைக் கும். அத்துடன் இறுதி தீர்ப்பின் நகலும் வழக்கை தொடர்ந்த வர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த வசதியை லோக் பால் அமைப்பின் தலைமை நீதிபதி பினாகி சந்திர கோஸ் தொடங்கி வைத்தார். புகார்களுக்கு விரைவான தீர்வு இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘லோக்பால் ஆன்லைன் வழிமுறை பாது காப்பானது. இது தாக்கல் செய்வது முதல், இறுதி தீர்ப்புவரை புகார்தாரர்கள் தங்கள் புகாரை கையாள வழி செய்கிறது. மேலும் இது அதிக வெளிப்படைத் தன்மை யையும் செயல் ்திறனையும் கொண்டு வரும். லோக்பால் ஆன்லைன் என்பது இணைய அடிப்ப டையிலான வசதி. இதன் மூலம் வெளிப்படையான மற்றும் திறமையான முறை யில் புகார்களுக்கு விரைவாக தீர்வு காண முடியும்என்றார். லோக்பால் ஆன்லைன் வழிமுறை குறித்து கிராமப் புறங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று லோக்பால் உறுப்பினர் நீதிபதி குமாரி கூறினார்.