வடகிழக்கு மாநி லங்களில் ஒன் றான சிக்கிம் மாநி லத்தில் கடந்த அக்டோபர் 3 அன்று திடீர் மேக வெடிப்பு காரணமாக டீஸ்தா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. சிக்கிம் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் பெரும் சேதத்தை எதிர் கொண்டது. சுமார் 4 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் வெள் ளத்தில் சிக்கிக் கொண்டனர். ராணுவ வீரர்கள் உட்பட நூற் றுக்கும் மேற்பட்டோர் மாய மான நிலையில், இதுவரை 40 உடல்கள் கைப்பற்றப்பட் டுள்ளன. 76 பேர் மாயமாகி யுள்ளதாகவும், 4,418 பேர் மீட்கப்பட்டு 19 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளதாகவும் மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. வெள்ளத்தால் வேலை வாய்ப்புகளை இழந்து தவிக் கும் பதிவு செய்யப்பட்ட 8,733 தொழிலாளர்களுக்கு தலா ரூ.10,000 வழங்கும் திட்டத்தை சிக்கிம் மாநில அரசு முன்னெடுத்துள்ளதாக வும் தகவல் வெளியாகி யுள்ளது. குழப்பம் கடந்த வாரம் வெள்ளத் தில் சிக்கி பலியானோர் எண் ணிக்கை 56 என அறிவிப்பு வெளியாகியது. ஆனால் தற்போது 40 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக மாநில அரசு கூறியிருப்பது குழப் பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை யை மாற்றி கூறியிருப்பது தொடர்பாக சிக்கிம் அரசு எவ் வித விளக்கமும் அளிக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.