பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் நிறுவனருமான லாலு பிரசாத், ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல் நிலை மோசம் அடைந்ததால், , தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். லாலுவின் இதயம் மற்றும் சிறுநீரகத்தில் பிரச்சனைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், மேல்சிகிச்சைக்காக எய்ம்ஸிற்கு அனுப் பப்பட்டுள்ளதாக ராஞ்சி மருத்துவமனை தெரிவித்துள்ளது.