ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் வெள்ளியன்று தில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக இருந்த லாலன் சிங் அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், புதிய தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து “இந்தியா” கூட்டணி மற்றும் கூட்டணியில் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அனைத்து அதிகாரமும் நிதிஷ் குமார் வசம் சென்றது.
சுக்குநூறாக நொறுங்கியது பாஜகவின் சித்துவிளையாட்டு
நிதிஷ்குமாருக்கும், லாலன் சிங்குக்கும் நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருப்பதால் தான், லாலன் சிங் பதவி விலகுகிறார் என்றும், லாலன் சிங் பாஜகவிற்கு வந்தால் அவரை வரவேற்போம் என பாஜக கருத்துக்கூற இதனை ஊடகங்கள் தலைப்புச் செய்தியாய் வெளியிட்டது. அதாவது லாலன் சிங் பாஜகவில் இணைய இருப்பது போன்ற அரசியல் பிம்பத்தை பாஜக தோற்றுவித்தது. இந்நிலையில், பாஜகவின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த ஜேடியு தலைவரும் பீகார் அமைச்சருமான விஜய்குமார் செளத்ரி,”தேர்தல் பணி சுமை காரணமாக கட்சித் தலைவர் பதவியை ஒப்படைக்க விரும்புவதாக லாலன் சிங் தெரிவித்திருந்தார். இதை நிதிஷ்குமாரும் ஏற்றுக்கொண்டார். இருவருக்கும் வேறு எந்த மோதலும் இல்லை” எனக் கூறினார். மேலும் லாலன் சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பதிலில்,”நான் ராஜினாமா கடிதம் எழுது வதாக இருந்தால் உங்களை (ஊட கங்கள்) அழைத்து என்ன எழுதலாம் என ஆலோசிப்பேன். தற்போது நீங்கள் (ஊடகங்கள்) பாஜக அலுவலகத்துக்கு சென்று அவர்கள் எழுதித்தரும் கடி தத்தைப் பெற்றுக்கொள்ளலாம்” எனக் கூறி பாஜகவிற்கு பதிலடி கொடுத்துள் ளார். இதன்மூலம் பாஜகவின் அரசியல் ஆதாய சித்துவிளையாட்டு சுக்குநூறாக நொறுங்கியது.