பஞ்சாப்பில் பிரத மர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், பிரதமரின் பயணத் திட்ட ஆவ ணங்களைச் சேகரித்து வைக்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றப் பதி வாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, ஒன் றிய பாதுகாப்பு செயலகத்தின் செயலா ளர் சுதிர் குமார் சக்சேனா தலைமையில் ஒன்றிய உளவுத்துறை (IB) இணை இயக்குநர் பல்பீர் சிங், சிறப்புப் பாது காப்பு படையின் ஐஜி சுரேஷ் ஆகி யோரைக் கொண்ட 3 பேர் குழுவை உள் துறை அமைச்சகம் அமைத்துள்ளது.