திருவனந்தபுரம், ஜூலை 22 - மாநிலத்திலுள்ள அனைத்து பள்ளி களிலும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும்; மேலும் பள்ளி கள் அனைத்தையும் அடுத்த கல்வியாண்டு முதல் இருபாலர் சேர்ந்து படிக்கும் பள்ளி களாக மாற்ற வேண்டும் என்று கேரள மாநில குழந்தைகள் நல ஆணையம் உத்தர விட்டுள்ளது. கேரளாவில் பாலின சமத்துவத்தை பள்ளி பருவத்தில் இருந்தே கற்றுத் தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலி யுறுத்தி வந்த நிலையில், இது தொடர்பாக மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து உள்ளது. அதில், “அடுத்த கல்வி ஆண்டு முதல் கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளி லும் மாணவ - மாணவியரை சேர்த்துக் கொள்ள வேண்டும். இனி இருபால ருக்கும் தனித்தனியாக பள்ளிகள் இருக்கக் கூடாது. அதற்கேற்ப அனைத்து பள்ளிகளி லும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. கேரளத்தில் தற்போது மகளிர் மட்டும் படிக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை 280 ஆகவும், ஆடவர் மட்டும் படிக்கும் பள்ளி களின் எண்ணிக்கை 164 ஆகவும் உள்ளது. இந்நிலையில்தான், இந்த பள்ளிகள் அனை த்தையும் அடுத்த கல்வி ஆண்டு முதல் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளியாக மாற்ற வேண்டும் என்று குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்துவார்கள் என்றும், அதன்பிறகு இந்த உத்தரவை அமல் படுத்துவது குறித்து அரசு முடிவு செய்யும் என கூறப்படுகிறது.