திருவனந்தபுரம், நவ.24- கேரளத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 2021-22-இல் புற்றுநோய்க்கான மருந்துகளை வாங்குவதற்கு அனு மதிக்கப்பட்ட தொகை ரூ.12,17,80,000. 2022-23-இல் ரூ.25,42,46,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் புற்றுநோய் மருந்து களுக்கான தொகையை உயர்த்த அரசு முயற்சித்து வருகிறது. 2023-24-ஆம் ஆண்டிற்கான தொகையை உயர்த்தவும் அரசு முயற்சித்து வரு கிறது. மருத்துவக் கல்லூரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாழ்க்கை முறை நோய் பரிசோதனை திட்டத்தின் ஒரு பகுதி யாக நடந்து வரும் ஸ்கிரீனிங்கில் அதிக மான புற்றுநோயாளிகள் கண்டறி யப்படலாம். அதன்படி, மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த தொகை உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். அவ்வப்போது அத்தியாவசிய மருந்துகளை வாங்குவதற்கான வரம்பை உயர்த்துமாறு கேஎம்எஸ் சிஎல் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மருந்துகளின் விலை அதிகரிப்பு மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய வரம்பு அதிகரிப்பு கோரப்படுகிறது. இம்முறை புற்றுநோய் மருந்து களின் நிதி வரம்பை உயர்த்துவது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கு நர் அனுப்பியுள்ள கடிதம் வழக்கமான கடிதம்தான். இதற்கு முன், பொது மற்றும் அத்தியாவசிய மருந்துகளு டன், புற்றுநோய் மருந்துகளுக்கான தொகையும் வழங்கப்பட்டது. எவ்வா றாயினும், அரசாங்கத்தின் சிறப்பு கவ னத்தின் படி, புற்றுநோய் மருந்து களுக்கான சிறப்பு நிதியொன்றை ஒதுக்கி, இத்தொகை இரட்டிப்பாக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.