states

img

ஒடிசாவில் 6974 சீர்மிகு வகுப்பறைகளை அமைக்கும் கேரள பொதுத்துறை நிறுவனம்

ஒடிசாவில் 6974 அரசு மற்றும் உதவி  பெறும் பள்ளிகளில் உயர் தொழில் நுட்பத்துடன்கூடிய சீர்மிகு வகுப்பறைகள் உருவாக உள்ளன. இவற்றை அமைக்க கேரள அரசின் பொதுத்துறை நிறுவன மான கெல்ட்ரானுக்கு ரூ. 164 கோடி மதிப்பிலான பணி ஆணை கிடைத்துள்ளது. கெல்ட்ரானின்  (Kerala State Electronics Development Corporation Limited - KELTRON) அகமதாபாத் சந்தைப்படுத்தல் அலுவலகம் ஒடிசா கணினி பயன்பாட்டு மையத்திலிருந்து (OCAC) பணி ஆணையைப் பெற்றுள்ளது. இதன்படி  மூன்று ஆண்டுகளுக்கு சீர்மிகு வகுப்பறை நிறுவுதல், ஆணை யிடுதல், செயல்பாடு, உள்ளடக்க சேமிப்பு மற்றும் விநியோக மென்பொருள் உள்ளிட்ட சேவைகளை கெல்ட்ரான் வழங்கும். மற்ற மாநிலங்களிலிருந்தும் இதே போன்ற பணி ஆணைகளை கெல்ட்ரான் எதிர்பார்க்கிறது. தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப, குறைந்த செலவில் தரமான பொருட்களை இணைத்து, பள்ளி களில் கெல்ட்ரான் சீர்மிகு (SMART) வகுப்பறைகளை நிறுவி வருகிறது. பொதுக் கல்வித் துறையின் விதிமுறை களின்படி சீர்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படும். ஒரு அடிப்படை சீர்மிகு வகுப்பறைக்கான தொகுப்பில் மடிக் கணினி, புரொஜெக்டர், யுஎஸ்பி மல்டிமீடியா ஸ்பீக்கர்கள், ப்ரொஜெக்டர் திரை போன்றவை அடங்கும். மேம்பட்ட சீர்மிகு வகுப்பறையில் ப்ரொஜெக்டர் திரைக்குப் பதிலாக இன்டராக்டிவ் பேனல் போர்டு பயன்படுத்தப்படுகிறது. சீர்மிகு வகுப்பறைகள் அமைப்புக்கு  ஐந்தாண்டு கள் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. கெல்ட்ரான் நிறுவனம், கேரளத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் 45 ஆயிரம் சீர்மிகு வகுப்பறைகளை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கெல்ட்ரான் ஐடி பிசினஸ் குரூப் இந்த திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.