பாஜக-வுக்கு வாக்களிக்காவிட்டால், “ஜம்மு - காஷ்மீர், கேரளா போல உ.பி. மாறிவிடும்” என்று அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் சிரிப்பு காட்டியிருந்தார். இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயனைத் தொடர்ந்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா வும் பதிலடி கொடுத்துள்ளார். “உத்தரப் பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை விட காஷ்மீரில் நன்றாகவே இருந்தது. குற்றங்களும் கூட உ.பி.யை விடக் குறைவுதான். வளர்ச்சி யிலும் உ.பி.யை விட காஷ்மீர் மேம்பட்ட மாநிலம்தான்” என்று தெரிவித்துள்ளார்.