அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் தனது மகளைச் சேர்த்த நீதிபதி
சிவகாசி, ஜூன்10- சிவகாசி அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் தனது மகளை சேர்த்தார் சார்பு நீதிமன்ற நீதிபதி. சிவகாசி சார்பு நீதிமன்றத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ளார் நீதிபதி விஜயபாரதி. இவர் தனது மகளை விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ் வழியில் சேர்த்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியைச் சேர்ந்த விஜய பாரதி, புதுக்கோட்டை மாவட்ட நீதிமன் றத்தில் சார்பு நீதிபதியாக பணியாற்றி வந்தார். தற்போது சிவகாசி சார்பு நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப் பட்டார். சிவகாசி நீதிமன்றத்தில் பொறுப்பேற்று பணிகளைத் தொடங்கி யுள்ளார். இந்நிலையில், நீதிபதி விஜயபாரதி தனது மகள் அன்பிற்கினியாளை(7) சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் தமிழ் வழியில் இரண்டாம் வகுப் பில் சேர்த்தார். இதையடுத்து பள்ளித் தலைமை ஆசிரியர் தனபால் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவியை வர வேற்றனர். அரசுப் பள்ளியில் தனது மகளை நீதிபதியே சேர்த்துள்ளதால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மேலும் அதிகரிக்கும் என ஆசிரியர்கள் பெருமிதத்துடன் தெரி வித்தனர்.