states

img

ஜெட் ஏர்வேஸ் நிறுவன கடனில் நகைகள் வாங்கிய நரேஷ் கோயல்

இந்தியாவின் முன்னணி விமான நிறு வனங்களில் ஒன்றான ஜெட் ஏர் வேஸ் நிறுவனம் 2017 ஆண்டிற்கு பிறகு மிகப்பெரிய நஷ் டத்தைச் சந்திக்கத் தொடங்கியது. இதனால் அந்நிறுவனம் கடன் மூலம் நிறுவனத்தை நஷ்டத்தை மீட்டெடுக்க முயற்சித்தது. ஆனால் வங்கிகள் கொடுத்த கடன் பணத்தின் ஒரு பகுதியை ஜெட் ஏர்  வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் குடும்  பத்தினர் தங்கள் சொந்த உபயோகத்திற் காக செலவு செய்துள்ளனர். அதாவது நரேஷ்  மற்றும் அவரது மனைவி கடன்தொகை யில் நகைகள் மற்றும் பர்னிச்சர் பொருட்  கள் வாங்கி குவித்துள்ளதாக அமலாக்கத்  துறை கூறியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவ னர் நரேஷ் கோயல் ரூ.7538 கோடி வங்கி  மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள நிலை யில், திங்களன்று மும்பை பிஎம்எல்ஏ நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.