states

img

விஎச்பி, பஜ்ரங் தளத்திடம் மன்னிப்புக் கேட்ட குஜராத் பள்ளி நிர்வாகம்!

அகமதாபாத், மார்ச் 18 - “கல்வி நிலைய வளாகத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை” என்று ஹிஜாப் விவகாரத்தில், கர்நா டக உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அண்மையில் தீர்ப்பு வழங்கியது.  இதையொட்டி, சங்-பரிவார் அமைப்புகளும் “ஆமாம்.. ஆமாம்..! கல்வியா, மதமா? என்றால், கல்விதான் முக்கியம். மத அடையாளங்களுக்கு கல்வி வளாகத்தில் இடமில்லை” என்று ‘பொதுநியாயம்’ பேசினர். இப்போதும் பேசி வருகின்றனர். ஆனால், அதே சங்-பரிவார் கூட்டம், கல்வி நிலைய வளாகத்தில் இந்து மத முழக்கங்களை எழுப்பிய மாண வர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்ட தற்காக, பள்ளி நிர்வாகத்தை மிரட்டி தற்போது மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். குஜராத் மாநிலம் வாபியில் உள்ள செயிண்ட் மேரிஸ்  பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாண வர்கள் இருவர் கடந்த மார்ச் 11 அன்று ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இதனைக் கண்ட ஆசிரியர் ஒருவர் பள்ளியின் விதி களுக்கு எதிராக, மத முழக்கங்களை எழுப்பியதற்காக, இனிமேல் இப்படி நடந்துகொள்ள மாட்டோம் என்று மாணவர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியுள்ளார். இந்த விஷயத்தை, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்பி னரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில், அவர்கள் பள்ளி முன்பு திரண்டு, ‘ஜெய் ஸ்ரீராம்’ கூறுவதை எப்படி தடுக்கலாம்? என்று ரகளை செய்துள்ளனர். கூச்சல் போட்டு, மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த பள்ளி நிர்வா கம், “எங்கள் செயலால் உங்கள் மத உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள் கிறோம்” என்று தற்போது கடிதம் வெளியிட்டுள்ளது.