புதுதில்லி, அக்.7- தில்லியில் சனிக்கிழமை (அக். 7) நடை பெற்ற 52-ஆவது சரக்குகள் மற்றும் சேவை கள் வரி (ஜிஎஸ்டி) மன்றக் கூட்டத்தில் தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலா ண்மை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். அப்போது, அமைச்சர் தங்கம் தென்ன ரசு, “இறுதிப் பயன்பாட்டின் அடிப்படையில் வேறுபடுத்துவதன் மூலம் எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹால் (இஎன்ஏ) மீது ஜிஎஸ்டி மற்றும் மதிப்புக் கூட்டு வரி (வாட்) என இரண்டு விதமான வரி விதிப்பதை எதிர்த்து தனது வலுவான வாதங்களை எடுத்துரைத்தார். இஎன்ஏ மீது இரண்டு விதமான வரி விதிப்பதில் உள்ள நிர்வாக நடைமுறை சிக் கல்களை எழுப்பினார். தமிழ்நாடு நிகர இஎன்ஏ இறக்குமதியாளராக இருப்பதால், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்று அவர் கவலை தெரிவித்தார். மேலும், மொலாஸஸ் மீதான ஜிஎஸ்டி வரிவிகிதத்தை கணிசமான அளவு குறைத்தால், மாநிலத்திற்கு பெரும் வரு வாய் இழப்பு ஏற்படும் என்று அவர் தெரி வித்தார்.