states

img

வெறுப்பு, பிரிவினை சமத்துவமின்மைக்கு எதிராக போராடுவோம்!

மும்பை, ஜன.31- மகாராஷ்டிரா மாநிலத்தில், ஜெஇஎஸ் கல்லூரியின் ‘காந்தி வாசிப்பு வட்டம்’ நடத்திய ‘கர் கி தேக்கோ’ (‘செய்து பார்’) என்ற தலைப்பிலான இணையவழி கருத்தரங்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி பங்கேற்று உரையாற்றியுள் ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: நாட்டு விடுதலையின் 75-ஆவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் ‘ஆசாதி கா அமிர்த மஹோத்ச வ’த்தைக் அரசு கொண்டாடுகிறது. ஆனால் இந்திய வரலாற்றின் அமிர்தம் இன்று நஞ்சாகிவிட்டது. வெறுப்பு மிகுந்து, வெறுப்பே பிரச்சாரம் செய் யப்படுகிறது. மகாத்மா காந்தியின் படிப்பினை கள் மங்கி வருகின்றன. மாறாக, அவ ரைக் கொலை செய்த, நாதுராம் கோட் சேவின் சித்தாந்தம் மேலோங்கியுள் ளது. தேசத்தின் ஒரு சாரார் வரலாற்றை  சிதைக்கின்றனர். அதை அவர்களின் தேவைக்கேற்ப மாற்றி எழுதுகின்ற னர்.

அதனால் நாம் நமது உண்மை யான வரலாற்றை மீட்டெடுக்க வேண் டிய சூழலில் உள்ளோம். வெறுப்புக் கும், பிரிவினைவாதத்துக்கும் எதிராக குரல் கொடுக்க வேண்டியுள்ளோம். நாம் இப்போது வன்முறை, வெறுப்பு, பிரிவினைவாதத்தின் கலாச் சாரத்தை ஏற்றுக்கொண்டிருக்கி றோம். மதம், சாதி, பிராந்திய அடிப்ப டையில் பிரிந்து கொண்டிருக்கிறோம். தேசம் என்பது வெறும் எல்லை களால், கொடியால், அல்லது ஒரு வரைபடத்தால் ஆனது அல்ல. ஒரு தேசம் என்பது மனிதர்கள் வாழும் இடம். மக்கள்தான் அந்தத் தேசத்தின் ஆன்மா. மகாத்மா காந்தி அன்று, தண்டி யாத்திரையைத் தொடங்கிய போது பலரும் புருவங்களை உயர்த்தினர். இது கட்சிக்கு தர்மசங்கடத்தை உரு வாக்கும் என்றனர். ஆனால் அனை வருக்கும் காந்தி ஒரே பதிலைச் சொன்னார். ‘செய்து பாருங்கள்’ என்றார். அவர் தண்டி யாத்திரையில் வெற்றி கண்டார். இன்றும் நாம், ‘செய்து பார்க்க’ வேண்டிய சூழ லில் உள்ளோம். நாம் வெறுப்பு, பிரி வினை, சமத்துவமின்மைக்கு எதிராக நாம் முடிந்ததை செய்து பார்ப்போம். காந்தியின் கொள்கையைப் பின் பற்றுவதே நாம் அவருக்குச் செய்யும் நன்றி. இவ்வாறு துஷார் காந்தி கூறி யுள்ளார்.