லக்னோ, ஜன.10- ஏழு கட்டத் தேர்தலுக்குப் பின், உத்தரப் பிர தேசத்தில் பாஜக-வின் கதை முடியப் போகிறது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கூறி யுள்ளார். 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு, பிப்ரவரி 10-ஆம் தேதி ஆரம் பித்து மார்ச் 7 வரை 7 கட்டங்களாக தேர்தல் அறி விக்கப்பட்டுள்ளது. இதில், பாஜக தலைமையில் அப்னா தளம் மற்றும் நிஷாத் கட்சி ஆகிய கட்சிகள் ஒரு அணி யாகவும், சமாஜ்வாதி கட்சி தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அப்னாதளம் காமேரேவாடி, ராஷ்ட்ரிய லோக்தளம் உள்ளிட்ட 16 கட்சிகள் ஒரு அணியாகவும், பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் தனித்தும் களம்காண உள்ளன. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை வர வேற்றுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ், இந்த தேர்த லோடு பாஜகவின் கதை முடிந்து விடும் என்று கூறி யுள்ளார். “பாஜக அரசுக்கு விடை கொடுக்க மக்கள் தயாராகி விட்டனர். இந்த 7 நாள் வாக்குப் பதிவும் மக்களுக்கும், மாநிலத்திற்கும் மிகப் பெரிய மாற்றத் தைக் கொண்டு வரப் போகிறது. மாபெரும் மாற்றம் வரப் போகிறது. சமாஜ்வாதி கட்சி ஆட்சியைப் பிடிக்கப் போகிறது. தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நடத்தை விதிமுறைகளை சமாஜ்வாதிக் கட்சி முறை யாக பின்பற்றும். ஆனால், ஆளுங்கட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டிய பெரும் பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.