states

img

கியூபாவில் சர்வதேச புத்தகத் திருவிழா

ஹவானா, ஏப். 26- கியூபாவில் நடைபெற்று வரும்  30வது சர்வதேசப் புத்தகத் திருவிழா  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. ஏப்ரல் 20 ஆம் தேதியன்று துவங்கிய இந்த விழா 30 ஆம் தேதி  வரையில் நடைபெறுகிறது. தலை நகர் ஹவானின் ஒரு பகுதியிலும், பழைய ராணுவத் தளமான சான் கார்லோஸ் டி லா கபானாவிலும் இந்த  விழா நடக்கிறது. இந்த விழாவில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. அதோடு, ஆயி ரத்திற்கும் மேற்பட்ட டிஜிட்டல் புத்த கங்களும் விற்பனைக்காக வைக்கப் பட்டிருக்கின்றன. 32 நாடுகளின் பிரதிநிதிகளை ஒரே  மேடையில் இந்த விழா கொண்டு வரு கிறது. பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட 376 வெளிநாட்டுப் பிரதி நிதிகள் இந்த விழாவில் பங்கேற் கிறார்கள். மெக்சிகோ நாடு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக் கிறது. இதுவரையில் எந்தவொரு நாடும் இரண்டாவது முறையாக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட தில்லை. அந்தப் பெருமையை மெக்சிகோ தட்டிச் செல்கிறது. இரண்டாவது முறையாக சிறப்பு விருந்தினராக மெக்சிகோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. கியூபாவின் அழைப்பை ஏற்றுக் கொண்ட மெக்சிகோ இசையமைப் பாளர்கள், கலைஞர்கள் மற்றும் நட னக்கலைஞர்கள் உள்ளிட்ட பலர்  கொண்ட குழுவை அனுப்பியிருக் கிறது. இரு நாட்டு உறவை மேம் படுத்தும் வகையில் புத்தகத் திரு விழாவில் சிறப்புப் புத்தக அரங்கு ஒன்றை மெக்சிகோ திறந்துள்ளது.  அந்நாட்டு முன்னணி எழுத்தாளர்கள் பலர் எழுதிய நூல்கள் அந்த அரங்கில்  வைக்கப்பட்டுள்ளன. கியூபாவின் முன்னணி எழுத்தா ளர்கள் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு வருகிறார்கள். அரங்கு களில் தங்கள் நூல்கள் வாங்குபவர் களோடு உரையாடுவது, நூல்களில் கையெழுத்துப் போட்டுத் தருவது, நூல்களைப் பற்றி சந்தேகங்களுக்கு விடையளிப்பது உள்ளிட்ட பல்வேறு  வேலைகளை அவர்கள் செய்கிறார்கள். குழந்தைகளுடனான எழுத்தாளர்களின் உரையாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.